| 
 25. ஐயன்நொய்யன்னணி
    யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச் செய்யன்வெய்யபடை
    யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில் வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம் உய்யும்வண்ணந்நினை
    மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே. 3 __________________________________________________ கு-ரை: இது வலிதாயத்தை
அடையும் அடியார்கட்கு வினையில்லை என்றது. படிறாக - பொய்யாக.
கலனேந்தி - பிரமகபாலத்தைத் திருக்கரத்தில் ஏந்தி;
என்றது உலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக்
கொண்ட இறைவன் பலிகொண்டுண்டான் என்பது பொருந்தாது
ஆகலின், அதுவும் அவருக்கோர் விளையாட்டு என்பதை
விளக்க. படிறாக, ஏந்தி, கொண்டு, உண்டுணும் கள்வன்
எனக்கூட்டுக. அன்றியும், கள்வனாதற்குப் படிறும்
இயைபுடைமை காண்க. வினை அல்லல் துயர் - வினை ஏதுவாக
வரும் அல்லலும் துன்பமும். 3. பொ-ரை: வலிதாயத்தை
உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி
தீரும், இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன்,
நுண்ணியன், அருகிலிருப்பவன், செந்நிறமேனியன், நெடிய
மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய
அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு
உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள்
அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து
உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும்வண்ணம்
நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள்
உண்டாகும். கு-ரை: இது வலிதாயம்
உலகப் பிணியைத்தீர்ப்பது; அதனை நினைத்தால்
நும் பிணியும் தீரும்; இன்பம் ஆம் என்கின்றது. ஐயன் - அழகியன். நொய்யன்
- அணுவினுக்கு அணுவாய் இருப்பவன். பிணியில்லவர் -
அநாதியே பந்தித்து நிற்பதாகிய ஆணவமலக் கட்டற்ற
பெரியார்கள். என்றும் தொழுதேத்த - முத்திநிலையிலும்
தொழ. வெய்ய படை - கொடியவர்களுக்கு |