16. திருப்புள்ளமங்கை
பதிக வரலாறு:
வேதங்களில் சொல்லப்பட்ட
அருங்கருத்துக்களின் உள்ளீடாகிய சிவஞானம் தம்மறிவில்
நிரம்பப்பெற்ற பிள்ளையார் திருச்சக்கரப்பள்ளியை
வணங்கிக் கொண்டு வயற்கரை வழியாகப் புள்ளமங்கையை
அடைந்தார்கள். அங்கேயுள்ள ஆலந்துறை என்னும்
திருக்கோயிலுக்குச் சென்றார்கள். இறைவன் திருவடித்தலத்தை
அன்போடு வணங்கிப் ‘பாலுந்துறுதிரளாயின‘ என்னும்
இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.
பண்: நட்டபாடை
பதிக எண்: 16
திருச்சிற்றம்பலம்
163. பாலுந்துறு திரளாயின
பரமன்பிர மன்றான்
போலுந்திற லவர்வாழ்தரு
பொழில்சூழ்புள மங்கைக்
காலன்றிற லறச்சாடிய
கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை
யடையாவினை தானே. 1
__________________________________________________
1. பொ-ரை: பாலினின்று மிதந்து
வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும், காலனது
வலிமை முழுவதையும் அழித்தவரும், வேதப்
புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும்
பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில்
விளங்குபவரும் ஆகிய இறைவனை நினைந்து வழிபடுபவர்களை
வினைகள் அடையா.
கு-ரை: பால் உந்து உறுதிரள் - பாலைக்
கடைதலால் விளைந்த வெண்ணெய். பிரமன் தான்
போலுந்திறலவர் - பிரமனும் அவன் போலும் தன்மையினராகிய
அந்தணரும். ஆலந்துறை கோயிலின் பெயர்;
புள்ளமங்கை தலத்தின் பெயர். இதனை
"புளமங்கை ஆதியவர் கோயில் திருவாலந்துறை தொழுமின்"
என்ற இப்பதிகம் பத்தாம்
|