| 
 295. பாலு நெய்யுந் தயிரும்
பயின்றாடித்தோலு நூலுந் துதைந்த வரைமார்பர்
 மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
 ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.
2
 296. செய்யர் செய்ய சடையர்
விடையூர்வர்கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
 தைய லாளொர் பாக மாயவெம்
 ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 3
 297. பிணிகொ ளாக்கை யொழியப்
பிறப்புளீர்துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்.
 ___________________________________________________ விபூதி (திருநீறு). ஒப்பர் ஒப்பர் என்பதற்குத்
தமக்குத்தாமே ஒப்பு ஆனவர் என்றும் உரை காண்பர். 2, பொ-ரை: பாலையும் நெய்யையும் தயிரையும்
விரும்பி யாடிப் புலித்தோலும் முப்புரி நூலும்
பொருந்திய மலை போன்று விரிந்த மார்பினராய்
விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய, மயக்கும் சோலைகளால்
சூழப்பெற்ற, இள மயில்கள் ஆரவாரிக்கும் திருச்சோற்றுத்துறையைச்
சென்றடைவோம். கு-ரை: பாலும் நெய்யும் தயிரும் ஆடி
என்றது பஞ்சகவ்யங்களில் தனித்தனியாக இறைவனுக்கு
அபிஷேகிக்கத்தக்கன இம் மூன்றுமே எனக் குறித்தபடி.
தோல் - புலித்தோல், மான் தோலுமாம். மாலும் -
மயக்கும். ஆலும் - ஒலிக்கும். 3. பொ-ரை:  சிவந்த திருமேனியரும், செம்மை
நிறமுடைய சடைமுடியினரும், விடையூர்ந்து வருபவரும், கையில்
பற்றிய சூலத்தினரும், வீரக்கழல் அணிந்தவரும்,
இடுகாட்டில் விளங்குபவரும், உமையம்மையைத் தன்மேனியில்
ஒரு கூறாகக் கொண்டவருமான எம் தலைவராய சிவபிரான்
எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். கு-ரை:  வேல் - சூலம். கரிகாடர் -
சுடுகாட்டில் நடிப்பவர். ஐயர் - தலைவர். கழலர் -
வீரக்கழலையுடையவர். 4. பொ-ரை:  நோய்கட்கு இடமான
இவ்வுடலுடன் பிறத்தல் |