|
திருத்தொண்டர் புராணம்
திருஞானசம்பந்தர் புராணம்
அப்போ தரையார் விரிகோ வணஆடை
ஒப்போ தரும்பதிகத் தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார் தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற் கொண்டு கவுணியனார்.
- சேக்கிழார்.
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
கழல்கின்ற ஐங்கணை அந்தியும்
அன்றிலுங் கால்பரப்பிட்
டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன்றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் றன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனிஇன் றுறுகின்றதே.
- நம்பியாண்டார் நம்பி.
|