பக்கம் எண் :

550திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வா மிவையுற் றுணர்வார்க்கே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்.

கு-ரை: இவைபத்தும் உணர்வார்க்கு உயர்வாம் என்கின்றது நயர் காழி - நயம் உணர்ந்த பெரியோர்கள் உறைகின்ற காழி. மயல். மயக்கம். செயலால் - திருவருள் உண்ணின்று செய்தலால்.

திருநல்லூர்ப் பெருமணப் புராணம்

சோணாடு தனக்கெழிலாம் புகலிதனிற்

கவுணியர்பாற் றோன்றிநீடு

கோணாக மணிதருசெஞ் சடைப்பெருமான்

அருண்மேவிக் குவலயத்துள்

மாணாருஞ் சைவநெடுஞ் சுடரேற்றிச்

சமணிருளின் வலிமைநீக்கி

ஆணான பெண்ணையுறு பெண்ணாகச்

செய்தவர்தா ளகத்துள் வைப்போம்.

-சிவக்கொழுந்து தேசிகர்.

மயூராசலப் புராணம்

தழுதழுப்ப அழுமகவு பாலருந்தும்

எனுமொழிக்குச் சான்றேயாகத்

தொழுதகுதந் தையைக்காணா தழுதிரிய

பரசுகத்திற் றொடக்குண் டன்பால்

முழுமலமா யையைநீக்கு ஞானப்பால்

உமையருள முன்னந்தேக்கும்

கழுமலப்பே ரூரின்வரும் பிள்ளையடி

உள்ளிவினைக் கரிசு தீர்ப்பாம்.

- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.