| சீகாழிப் புராணம் குழுவேறச் சமண்மூகர் அழலேற விடுத்ததனைக் கூடற் கோமான் வழுவேறு முடலேற வுடன்முரணும் மனமுரணும் மாற்றி அன்னார் கழுவேற வெண்ணீறும் ஐந்தெழுத்தும் விரித்துலகைக் கதியி லேற்றி மழுவேறும் கரத்தான்றன் அருளேறும் கவுணியர்கோன் மலர்த்தாள் போற்றி. - சுப்பையாப்பிள்ளை. திருஆப்பனூர்ப் புராணம் பெருமுலைப்பால் அகன்பிரமன் கண்டறியாப் பெருந்தகைமேல் பொருமுலைப்பான் மெழுகினுளம் புரைந்துருகத் தமிழ்பாடும் அருமுலைப்பால் அரும்பனைய மணிமுறுவல் மலைமகளார் திருமலைப்பால் மணங்கமழ்வாய்ச் செல்வனையாம் பரவுவாம். -கந்தசாமிப்புலவர். |