பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்71


8. தல புராணம் முதலியன:

5-10. அண்ட மறையவன் - இரணிய கருப்பனாகிய பிரமன். பிரமன் நீரையே முதற்கண் படைத்தான் என்பது அதன்கண் பொன் மயமான முட்டையாக உலகை ஆக்கினான் என்பதும் புராண வரலாறு.

11-7. தம் திருவடிகளைப் பணிந்த தாரகாக்ஷன், கமலா க்ஷன், வித்யுன்மாலி என்ற மூவர்கட்கும் சுதர்மன், சுநீதி, சுபுத்தி எனப்பெயர் ஈந்து வாயில் காவலராகும் வரத்தால் மிக அருள் செய்தவன்.

இச்செய்தியை அதிகைப்புராண வரலாறு, தர்மசங்கிதை வசனம் என்பனவற்றால் அறியலாம்.

12-5. தன் தவவலிமையால் தேவர்களை வருத்திய அந்த காசுரனைச் சிவபெருமான் பைரவரைக் கொண்டு முத்தலைச்சூலத்தில் குத்திக் கொணர அவன் பெருமானைத் தரிசித்ததும் உண்மை ஞானம் கைவரப்பெற்றான். அவனுக்குக் கணபதியாம் பதவியை அளித்தார் என்பது கந்தபுராணம்.

27-5. திருப்புன்கூர்த்தலத்து அம்மை திருநாமம் சொக்க நாயகி; அழகிய நாயகி, ஆதலின் இங்கு உகந்தருளியிருக்கும் பெருமான் அழகர் எனக் குறிப்பிடப்பட்டார். இது தலபுராணச்செய்தி.

31-5. இறையார் வளையாள் - குரங்கு அணில் முட்டத் திருத்தலத்து இறைவியின் திருநாமம் - இது தலபுராணச் செய்தி.

32-5. திருவிடைமருதூரில் சிவபெருமான் தைப்பூசத் திருநாள் அன்று காவிரியில் தீர்த்தம் கொள்வது தலபுராணச் செய்தி.

42-9. கொக்கு வடிவில் வந்த பகாசுரன் என்பவனை வாயைப் பிளந்து கண்ணன் கொன்ற செய்தி பாகவத புராணத்தில் குறிப்பிடப்படுவதாகும்.

45-1. கணவனால் கொல்லப்பட்ட நவஞானி என்னும் பார்ப்பனி மறுபிறப்பில் தரிசனச் செட்டி என்ற பெயரோடு பிறந்த தன் கணவனைப் பேய் வடிவினை மறைத்துப் பெண்வடிவில் வந்து பழையனூர் ஆலங்காட்டில் கொன்ற செய்தி அவ்வூர்த்தல புராணம் முதலியவற்றில் உள்ளது.