பக்கம் எண் :

70முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


7. விளக்கவுரை:

82-3. மயிலும் மடமானும் மதியும் இளவேயும் வெயிலும் பொலிமாதர்.

இந்நகரத்து மாதர் இனிமை தரும் மென்மையாகிய சாயலால் ஆண் மயிலையும், மருண்ட நோக்கத்தால் மானையும், நுதல் அழகால் பிறைமதியையும், தோள்களால் மூங்கிலையும், கற்பினால் வெயிலையும் போல விளங்குகின்றனர்.

129-7. புவிமுதல் ஐம்பூதமாய்ப் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய் அவை அவை சேர் பயன் உருவாய், அல்ல உருவாய்.

நிலன் ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன.

கரணம் நான்கு - மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்பன.

அவை சேர்பயன் உருவாய் - பூதம் முதலியவற்றைச் சேர்ந்த பயனே வடிவாய்; என்றது பூதப்பயனாகிய சுவை முதலிய தன்மாத்திரை ஐந்தும், புலன் ஐந்தின் பயனாய பொறி இன்பம் ஐந்தும், கரணம் நான்கின் பயனாய நினைத்தலும் புத்தி பண்ணலும் சிந்தித்தலும் இது செய்வேன் என அகங்கரித்து எழுதலும் ஆகிய நான்கும் கொள்ளப்படும். அல்ல உருவாய் - இவை அல்லாத அருவாகிய ஞானமாய்.

136-1. மாதர்மடப் பிடியும் மட அன்னமும் அன்னதோர் நடை.

உமாதேவியின் பெருமித நடைக்குப் பெண்யானை நடையும் நடையின் மென்மைக்கு அன்ன நடையின் மென்மையும் உவமை ஆயின.

இத்தகைய விளக்கவுரைகள் பல இம்முதல் திருமுறை உரையில் காணலாம்.