97. திருப்புறவம்
பண்:குறிஞ்சி
பதிக எண்:97
திருச்சிற்றம்பலம்
1047. எய்யாவென்றித் தானவரூர்மூன்
றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகுந்
திருமேனிச்
செய்யான் வெண்ணீறணிவான் றிகழ்பொற்
பதிபோலும்
பொய்யாநாவி னந்தணர்வாழும்
புறவம்மே. 1
1048. மாதொருபாலு மாலொருபாலும்
மகிழ்கின்ற
நாதனென்றேத்து நம்பரன்வைகுந்
நகர்போலும்
___________________________________________________
1. பொ-ரை: பொய் கூறாத நாவினை உடைய
அந்தணர்கள் வாழும் திருப்புறவம் என்னும்
சீகாழிப்பதி, இளையாத வெற்றியை உடைய
அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டன்,
உமையம்மையை ஒருகூறாகக்கொண்டு எழுந்தருளும், செய்ய
திருமேனியனாய் வெண்ணீறு அணிந்தவனாய் விளங்கும்
அழகிய பதியாகும்.
கு-ரை: புறவம் திரிபுரம் எரித்த
நீலகண்டர்பதிபோலும் என்கின்றது. எய்யா வென்றி
- இளையாத வெற்றியையுடைய. தானவர் - அசுரர்கள். மை -
விடம். பொய்யாநாவின் அந்தணர் - பொய்யே
சொல்லாத நாவினை உடைய அந்தணர். அவர்கள் கூறும்
உரை, தவறாத நா என்றுமாம்.
2. பொ-ரை: குருக்கத்தியில் மேவிய
வண்டுகள் இசைபாடவும் மயில்கள் ஆடவும்,
அவற்றிற்குப் பரிசிலாகப் புன்னை மரங்கள்
விரிந்த மகரந்தங்களைப் பொன்னாக அளிக்கும்
இயற்கை
|