| 
 
1079. மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன் கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம் நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன் பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே. 11 திருச்சிற்றம்பலம் ___________________________________________________ என்கின்றது. எடுத்து ஆர்ப்ப
அருந்தண்மேய - சமணர் புத்தர்கள் எடுத்து
நுகர்தற்கரிய தண்மையான இறைவன் மேவிய. தண் -
தண்மை; பண்பு தண்மையையுடைய இறைவனைக் காட்டி
நின்றது. 11. பொ-ரை: மாடவீதிகளையுடையதும்
ஆற்று நீர்வளம் மிக்கதுமான சீகாழிப் பதிக்கு
மன்னனும் பலராலும் நாட வல்லவனுமான நற்றமிழ்
ஞானசம்பந்தன் செங்காந்தள் மலர்களை ஈன்று
அவற்றின் கொழுவிய முனையால் கை குவிக்கும்
குற்றாலத்து இறைவர் மேல் பாடிய பாடல்கள்
பத்தையும் பாடப் பாவம் நீங்கும். கு-ரை: குற்றாலத்தைப்பற்றி
ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் வல்லார்
பாவம் பறையும் என்கின்றது. கோடல் -
செங்காந்தள், கொழுமுனை கூம்பும் - கொழுமையான சிகரம்
கூம்பியுள்ள. 
  
  
    
      | சோணசைலமாலை
         கூம்புறு
        கரமும் மலர்ந்திடு முகமும்
         கொண்டுநின்றனைவலம்
      புரிவோர்
         மேம்படு சரண
        மலர்ப்பொடி மேனி
         மேற்படிற்
        பவம்பொடி படுமே
         பூம்பொழிற்
        புகலிக்கிறைவனா னிலஞ்சேர்ப்
         புண்ணியத்
        தலங்களி னடைந்து
         தாம்புனை
        பதிகந் தொறும்புகழ் சோண
         சைலனே
        கைலைநாயகனே.
          - சிவப்பிரகாச சுவாமிகள்.
     |  |