| ஆளுடைய 
              பிள்ளையார் திருவுலாமாலை பொன்னிவள 
              நாடனைப் பூம்புகலி நாயகனைமன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே
 நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
 தொலைவில் புகழ்ச்சிறுத்தொண்டற்கும் - குலவிய
 தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
 மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய
 கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
 வாதில் அமணர் வலிதொலையக் - காதலாற்
 புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை
 வண்கழுவில் வைத்த மறையோனை - ஒண்கெழுவு
 ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
 பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து
 நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
 பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்த
 யாழை முரித்தும் இருங்கதவந் தான்அடைத்தும்
 சூழ்புனலில் ஓடத்தொழில் புரிந்தும் - தாழ்பொழில்சூழ்
 கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
 துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்
 நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
 முத்தின் சிவிகை முதல்கொண்டும்.
 -நம்பியாண்டார் 
              நம்பிகள்.
 |