| 
       
         
          |  | குற்றமில் 
            புகலியு ளிகலறு ஞானசம் பந்தன
 சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர்
 தீருமே.                           11
 |   திருச்சிற்றம்பலம் 
  குறுகிய இடையுடைய உமாதேவியோடு, 
        சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக், குற்றமற்ற புகலியில்
 அவதரித்த, எவரோடும் பகைமையில்லாத ஞானசம்பந்தன் அருளிய
 இத்திருப்பதிகத்தை முறையோடு ஓதுபவர்கள் அழிவற்றவர்கள். அவர்களின்
 துன்பங்கள் யாவும் தீரும்.
      கு-ரை: 
        கவின் - அழகு. உறு - பொருந்திய. சிறு இடையவள் - உமாதேவியார், புகலியுள். இகல் அறு - எவரொடும் பகைமையில்லாத,
 ஞானசம்பந்தன். சொல் - பாடல்களை. சொல் - சினை ஆகுபெயர். தகவு
 உற - முறையோடு, மொழிபவர், அழிவு இலர் எனவே அவரைப்பற்றிய
 துயரும் அழிவின்றி நிற்கும் என்னற்க. அவை பற்றற நீங்கும் என்பதாம்.
 தீர்தல் - விடற்பொருட்டாகும். (தொல், சொல், உரியியல். 22)
 
         
          | திருஞானசம்பந்தர் 
              புராணம் 
             பாடும்அர 
              தைப்பெரும் பாழியே முதலாகச் சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
 நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
 நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.                                        -சேக்கிழார்.
 |  |