| பதிக வரலாறு:  
            திருவின்னம்பர்த் 
        திருக்கோயிலை வணங்கிச் சென்று, வாலியார் வழிபட்ட வடகுரங்காடுதுறையை அடைந்து, அவ்வழிபாட்டையும் சிறப்பித்துப்
 பாடியருளியது இத்திருப்பதிகம்.
 பண்: 
        சாதாரி  
       
         
          | ப.தொ.எண்: 
            349 |  | பதிக எண்: 91 |   திருச்சிற்றம்பலம் 
         
       
        
       
         
          | 3778. |  கோங்கமே 
              குரவமே கொழுமலர்ப்              
           |   
          |  | புன்னையே 
            கொகுடிமுல்லை வேங்கையே ஞாழலே விம்முபா
 திரிகளே விரவியெங்கும்
 ஓங்குமா காவிரி வடகரை
 யடைகுரங் காடுதுறை
 வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா
 ரிடமென விரும்பினாரே.              1
 |  
      1.பொ-ரை: 
        கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை
 அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும்
 திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி
 வீற்றிருந்தருளுபவர்.
       கு-ரை: 
        கோங்கமே, குரவமே - கோங்கமும், குரவமும் எனப் பொருள் தரலால் ஏகாரம் எண்ணுப்பொருள். கொகுடி முல்லை -
 முல்லைவகை. விம்மு - பருத்த, பாதிரியாகிய இம்மரங்களை அடித்துக்
 கொண்டு பெருகும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறையைச்
 சடைமுடி அடிகளார் இடமென விரும்பினார் என்க.
 |