பதிக வரலாறு:
திருவின்னம்பர்த்
திருக்கோயிலை வணங்கிச் சென்று, வாலியார்
வழிபட்ட வடகுரங்காடுதுறையை அடைந்து, அவ்வழிபாட்டையும் சிறப்பித்துப்
பாடியருளியது இத்திருப்பதிகம்.
பண்:
சாதாரி
ப.தொ.எண்:
349 |
|
பதிக எண்: 91 |
திருச்சிற்றம்பலம்
3778.
|
கோங்கமே
குரவமே கொழுமலர்ப்
|
|
புன்னையே
கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா
ரிடமென விரும்பினாரே. 1 |
1.பொ-ரை:
கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை,
கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை
அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும்
திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி
வீற்றிருந்தருளுபவர்.
கு-ரை:
கோங்கமே, குரவமே - கோங்கமும், குரவமும் எனப்
பொருள் தரலால் ஏகாரம் எண்ணுப்பொருள். கொகுடி முல்லை -
முல்லைவகை. விம்மு - பருத்த, பாதிரியாகிய இம்மரங்களை அடித்துக்
கொண்டு பெருகும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறையைச்
சடைமுடி அடிகளார் இடமென விரும்பினார் என்க.
|