|  புண்ணிய மூர்த்தியான 
        சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய 
        இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர். 
              கு-ரை: 
        தாழ் - ஓடிப் பாய்கின்ற. பள்ளந்தாழுறு புனலில் (தி.8 திருவாசகம் 25.) இளம் காவிரி 
        (மென்புனலையுடைய காவிரி), இளந்தென்றல் என்பதுபோல. கருது - தியானித்துப் பயனெய்தத்தக்க 
        பாடல். கோழையா அழைப்பினும் - கோழைமிடறோடு பாடினாலும். கோழைமிடறு பாடற் கேலாதது 
         கோழைமிடறாக கவிகோளும் இலவாக இசைகூடும் வகையால் எனவரும் திருவைகாவூர்ப் பதிகத்தாலும் 
        அறிக. (தி.3 ப.71. பா.1.) அழைத்தல் - பாடுதல். அழைத்தல் என்பதற்கு மறு சொல் 
        விளித்தல் என்பது. அதன் பிறிதொரு பொருள் பாடுதல் என்பது. இதனை கொம்பர் இருங்குயில் 
        விளிப்பன காணாய் (மணிமேகலை - பளிக்கறை புக்க காதை. 13.) நீடு - என்றும் அழியாத. 
        வானுலகு - முத்தியுலகம்.  
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம் வடகுரங் 
              காடு துறையில் வாலியார்தாம்வழி பட்ட
 அடைவுந் திருப்பதி கத்தில் அறியச்
 சிறப்பித் தருளிப்
 புடைகொண் டிறைஞ்சினர் போந்து புறத்துள்ள
 தானங்கள் போற்றிப்
 படைகொண்ட மூவிலை வேலார் பழனத்
 திருப்பதி சார்ந்தார்.
 - 
              சேக்கிழார்.
 |  |