3813. |
விண்டலர்
பொழிலணி வெங்குரு மேவிய |
|
வண்டமர்
வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்க டுயர்பிணி யிலரே. 4 |
3814. |
மிக்கவர்
தொழுதெழு வெங்குரு மேவிய |
|
அக்கினொ
டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
தக்கவ ருறுவது தவமே. 5 |
இளம்பிறையென்னப்பட்டது,
முற்றாத பான் மதியஞ் சூடினானே என்றார்
அப்பர் மூர்த்திகளும். சடையீராகிய உமது இரண்டு திருவடிகளையும்
நினைக்க உற்ற பிணி நீங்கப்பெறுவார்கள். மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல
அடி (தி.6.ப.6.பா.9.) என்ற கருத்து.
4.
பொ-ரை: முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய
சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளும், வண்டுகள் விரும்பும் நீண்ட சடையுடைய
சிவபெருமானே! வண்டுகள் விரும்பும் சடையினையுடைய பெருமானாகிய
உம்மை வாழ்த்தும் சிறப்புடைய தொண்டர்கள் துயரும், பிணியும்
அற்றவர்கள் ஆவர்.
கு-ரை:
விண்டு அலர் - முறுக்குடைந்து மலர்கின்ற (பொழில்), வண்டு
அமர்சடை - வண்டு விரும்பும் சடை, எனவே மலர்மாலையணிந்த
சடையென்பது பெறப் பட்டது. அமர்தல் - விரும்புதல், (துயர்பிணி, இலர்)
துயர் - உள்ளம் பற்றியது, பிணி - உடலம் பற்றியது இலர் - இல்லாதவர்
ஆவார்.
5.
பொ-ரை: அன்பின் மிக்கார் தொழுது எழுகின்ற திருவெங்குரு
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அக்குப்பாசியோடு
பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானே! அக்குப்பாசியோடு பாம்பையும்
அணிந்துள்ள பெருமானாகிய உம் இணையடிகளைத் துதிக்கும் தகுதிபெற்ற
அடியவர்கள் பெறுவது சிறந்த தவத்தின் பயனாகும்.
கு-ரை:
மிக்கவர் - அன்பின் மிக்கோர், அக்கினோடு - அக்குப்
பாசியோடு, அரவு - பாம்பு. அசைத்தீரே - இடுப்பிற் கட்டியுள்ளீர்,
|