| 
         
          | 3811. | வேதியர் 
            தொழுதெழு வெங்குரு மேவிய |   
          |  | ஆதிய 
            வருமறை யீரே ஆதிய வருமறை யீருமை யலர்கொடு
 ஓதிய ருணர்வுடை யோரே.             2
 |  
         
          | 3812. | விளங்குதண் 
            பொழிலணி வெங்குருமேவிய |   
          |  | இளம்பிறை 
            யணிசடை யீரே இளம்பிறை யணிசடை யீரும திணையடி
 உளங்கொள வுறுபிணி யிலரே.          3
 |  
       2. 
        பொ-ரை: நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற அந்தணர்கள் வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி
 வீற்றிருந்தருளும், முதன்மையான வேதத்தின் பொருளானவரே!
 முதன்மையான வேதத்தின் பொருளானவரான உம்மை மலர்கள் கொண்டு
 பூசித்துத், தோத்திரம் செய்பவர்கள் சிவஞானம் உடையவர்கள் ஆவர்.
      கு-ரை: 
        ஆதிய அருமறையீர் - முதன்மையான வேதத்தின் பொருளாய் உள்ளீர், வேதம் பிரபல சுருதி எனப்படுதலின் முதன்மையானது
 என்னப் பட்டது. இனி ஆதியென்பதற்குப் பழமையான எனலும் ஆம். அலர்
 கொடு - மலர்கள் கொண்டு (பூசித்து) ஓதியர் - தோத்திரம் செய்பவர்கள்,
 உணர்வு உடையோர் - சிவஞானம் உடையவராவார். இனி ஓதி என்பதற்கு
 அறிவு எனவும் பொருள் உண்மையால் பூசித்து உணர்பவர் தாம்
 உணர்வுடையோர், அல்லாதார் உணர்விலிகளே எனலுமாம். அது
 உடையரெனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடைய ரோமற்று
 (குறள்.591) என்புழிப் போல.
       3. 
        பொ-ரை: பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளும், இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய
 சிவபெருமானே! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள
 உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத்
 தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர்.
       கு-ரை: 
        விளங்கு - மூவுலகிலும் விளங்கும் பெருமைவாய்ந்த, வெங்குரு என்க. விளங்கும் பொழில் எனக்கொள்ளின், செழிப்புடைய சோலை என்க.
 என்றும் ஓர் பெற்றியாய்க் கலைவளரப் பெறாமையால்,
 |