பதிக வரலாறு:
சீகாழிக்குரியது.
பெரிய புராணத்துள் கிளந்தோதப் படாதது.
திருமுக்கால்
பண்:
சாதாரி
ப.தொ.எண்:
352 |
|
பதிக
எண்: 94 |
திருச்சிற்றம்பலம்
3810. |
விண்ணவர்
தொழுதெழு வெங்குரு மேவிய |
|
சுண்ணவெண்
பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே. 1 |
1.
பொ-ரை: தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு
என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், சுண்ணம் போன்ற
வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே! சுண்ணம்
போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம்
தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள்
ஆவர்.
கு-ரை:
தொழுது எழும் - தொழாநின்று துயில் எழும், சுண்ண வெண்
பொடி - சுண்ணம் போன்றதாகிய வெள்ளிய திருநீறு. வெங்குரு மேவிய
பொடியணிவீரேயென்க. நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும்
எழிலுடைமையான், அக்கோலம் தொழுது எழுவார் உள்ளத்து நீங்காது
நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறு ஆம் என்னும் பேராசிரியர் உரை
இங்குக் கருதத்தக்கது. தொழுகழல் - தொழத்தகும் திருவடி, எண்ணுதல் -
தியானித்தல், ஆறுகோடி மாயாசத்திகள் வேறு வேறு தம் மாயைகள்
தொடங்கித் தடுத்தலின் எண்ணுதலும் அரிதென்பர் எண்ணவல்லார், உம -
உம்முடைய (கழல்கள்).
|