| 
         
          |  | தண்ணருஞ் 
            சடைமுடி யீருமைச் சார்பவர் விண்ணவ ரடைவுடை யோரே.               6
 |  
         
          | 3826. | எழிறிக 
            ழும்பொழி லின்னம்பர் மேவிய |   
          |  | நிழறிகழ் 
            மேனியி னீரே நிழறிகழ் மேனியி னீருமை நினைபவர்
 குழறிய கொடுவினை யிலரே.                 7
 |  
       6. 
        பொ-ரை: நினைத்தற்கரிய அளவில்லாத பெரும்புகழையுடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ந்த
 சடைமுடியுடைய சிவபெருமானே! குளிர்ந்த சடைமுடியுடைய உம்மைச்
 சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைவர்.
      கு-ரை: 
        எண் அரும்புகழ் உடை - நினைத்தற்கரிய அளவில்லாத பெரும் புகழை உடைய இன்னம்பர், தண் அரு - அரிய குளிர்ச்சியை
 உடைய, சடைமுடியீரே, கங்கைநீரும், சந்திரனும் தங்குதலால் அரிய
 குளிர்ச்சியுடையதாயிற்று. உம்மைச் சார்வர். விண்ணவர் அடைவு உடையோர்
 - ஏனைத் தேவர்க்குத் தாம் சார்பாகும் தன்மையுடைய வராவார். அடைவு -
 (சார்பாக) அடைதல், சார்பு - பற்றுக்கோடு.
       7. 
        பொ-ரை: அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஒளி
 விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே! ஒளி விளங்கும் திரு
 மேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய, வாட்டும் குழம்பிய கொடு
 வினை கெட்டழியும்.
       கு-ரை: 
        எழில் திகழ் பொழில் - அழகால் விளங்கும் சோலை. பசுமை நிறத்தாலும், பல நிற அரும்பு பூ, காய்கனி இவற்றின் தோற்றத்தாலும்
 எய்தும் அழகு. நிழல்திகழ் - ஒளியால் விளங்கும் மேனியினீர், உமை
 நினைபவர் குழறிய இப்பொருட்டு ஆதலை, கடுஅடுத்த நீர்கொடுவா
 காடிதாவென்று நடுநடுத்து நாநடுங்கா முன்னம் - பொடியடுத்த பாழ்
 கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக் கீழ்க்கோட்டம்
 செப்பிக் கிட
 |