பக்கம் எண் :

1138திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவ ரடைவுடை யோரே.               6

3826. எழிறிக ழும்பொழி லின்னம்பர் மேவிய
  நிழறிகழ் மேனியி னீரே
நிழறிகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே.                 7


     6. பொ-ரை: நினைத்தற்கரிய அளவில்லாத பெரும்புகழையுடைய
திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ந்த
சடைமுடியுடைய சிவபெருமானே! குளிர்ந்த சடைமுடியுடைய உம்மைச்
சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைவர்.

     கு-ரை: எண் அரும்புகழ் உடை - நினைத்தற்கரிய அளவில்லாத
பெரும் புகழை உடைய இன்னம்பர், தண் அரு - அரிய குளிர்ச்சியை
உடைய, சடைமுடியீரே, கங்கைநீரும், சந்திரனும் தங்குதலால் அரிய
குளிர்ச்சியுடையதாயிற்று. உம்மைச் சார்வர். விண்ணவர் அடைவு உடையோர்
- ஏனைத் தேவர்க்குத் தாம் சார்பாகும் தன்மையுடைய வராவார். அடைவு -
(சார்பாக) அடைதல், சார்பு - பற்றுக்கோடு.

     7. பொ-ரை: அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திரு
இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஒளி
விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே! ஒளி விளங்கும் திரு
மேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய, வாட்டும் குழம்பிய கொடு
வினை கெட்டழியும்.

     கு-ரை: எழில் திகழ் பொழில் - அழகால் விளங்கும் சோலை. பசுமை
நிறத்தாலும், பல நிற அரும்பு பூ, காய்கனி இவற்றின் தோற்றத்தாலும்
எய்தும் அழகு. நிழல்திகழ் - ஒளியால் விளங்கும் மேனியினீர், உமை
நினைபவர் குழறிய இப்பொருட்டு ஆதலை, “கடுஅடுத்த நீர்கொடுவா
காடிதாவென்று நடுநடுத்து நாநடுங்கா முன்னம் - பொடியடுத்த பாழ்
கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக் கீழ்க்கோட்டம்
செப்பிக் கிட”