பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)95. திருஇன்னம்பர்1137

3823. இடிகுர லிசைமுர லின்னம்பர் மேவிய
  கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழறொழும்
அடியவ ரருவினை யிலரே.                   4

3824. இமையவர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
  உமையொரு கூறுடை யீரே.
உமையொரு கூறுடை யீருமை யுள்குவார்
அமைகில ராகில ரன்பே.                   5

 
3825. எண்ணரும் புகழுடை யின்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே


பொருள்தரும். உளம் - மனம். மதிமிக உடையோர் - பேரறிவுடையவராவர்.

     4. பொ-ரை: இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு, முழவு போன்ற
வாத்தியங்கள் ஒலிக்க, திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே!
நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழும்
அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர்.

     கு-ரை: இடிகுரல் இசைமுரல் - இடியின் குரல்போலும் முழவம்
முதலிய வாத்திய ஓசை ஒலிக்கும். “முழவதிர மழையென்றஞ்சிச் சில
மந்தியலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே” (தி.1.ப.130.பா.1.)
என முன்னும் வந்தமை காண்க. கடி கமழ் - வாசனை வீசும்; சடைமுடி.

     5. பொ-ரை: உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே,
தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே, உமை
பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப்
பெறாதவர் ஆகார்.

     கு-ரை: இமையவர் - தேவர், கண்ணிமையாதவர், இன்னம்பர் மேவிய
உடையீர் என்க. உ(ம்)மை நினைப்போர், பேரன்பு படைத்தவர் ஆவர்.
அன்பு அமைகிலர் - அன்பு அமையமாட்டாதவர். ஆகார் எனவே அன்பு
அமையப்பெற்றவர் ஆவர் என்றதாம். இரண்டு எதிர் மறை ஓர்
உடம்பாட்டை வலியுறுத்திற்று.