| 
         
          | 3823. | இடிகுர 
            லிசைமுர லின்னம்பர் மேவிய |   
          |  | கடிகமழ் 
            சடைமுடி யீரே கடிகமழ் சடைமுடி யீரும கழறொழும்
 அடியவ ரருவினை யிலரே.                   4
 |  
         
          | 3824. | இமையவர் 
            தொழுதெழு மின்னம்பர் மேவிய |   
          |  | உமையொரு 
            கூறுடை யீரே. உமையொரு கூறுடை யீருமை யுள்குவார்
 அமைகில ராகில ரன்பே.                   5
 |   
       
        
          | 3825. | எண்ணரும் 
            புகழுடை யின்னம்பர் மேவிய |   
          |  | தண்ணருஞ் 
            சடைமுடி யீரே |  
  பொருள்தரும். உளம் 
        - மனம். மதிமிக உடையோர் - பேரறிவுடையவராவர்.       4. 
        பொ-ரை: இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு, முழவு போன்ற வாத்தியங்கள் ஒலிக்க, திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளுகின்ற, நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே!
 நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழும்
 அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர்.
      கு-ரை: 
        இடிகுரல் இசைமுரல் - இடியின் குரல்போலும் முழவம் முதலிய வாத்திய ஓசை ஒலிக்கும். முழவதிர மழையென்றஞ்சிச் சில
 மந்தியலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே (தி.1.ப.130.பா.1.)
 என முன்னும் வந்தமை காண்க. கடி கமழ் - வாசனை வீசும்; சடைமுடி.
       5. 
        பொ-ரை: உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே, தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே, உமை
 பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப்
 பெறாதவர் ஆகார்.
       கு-ரை: 
        இமையவர் - தேவர், கண்ணிமையாதவர், இன்னம்பர் மேவிய உடையீர் என்க. உ(ம்)மை நினைப்போர், பேரன்பு படைத்தவர் ஆவர்.
 அன்பு அமைகிலர் - அன்பு அமையமாட்டாதவர். ஆகார் எனவே அன்பு
 அமையப்பெற்றவர் ஆவர் என்றதாம். இரண்டு எதிர் மறை ஓர்
 உடம்பாட்டை வலியுறுத்திற்று.
 |