3823. |
இடிகுர
லிசைமுர லின்னம்பர் மேவிய |
|
கடிகமழ்
சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழறொழும்
அடியவ ரருவினை யிலரே. 4 |
3824. |
இமையவர்
தொழுதெழு மின்னம்பர் மேவிய |
|
உமையொரு
கூறுடை யீரே.
உமையொரு கூறுடை யீருமை யுள்குவார்
அமைகில ராகில ரன்பே. 5 |
3825. |
எண்ணரும்
புகழுடை யின்னம்பர் மேவிய |
|
தண்ணருஞ்
சடைமுடி யீரே |
பொருள்தரும். உளம்
- மனம். மதிமிக உடையோர் - பேரறிவுடையவராவர்.
4.
பொ-ரை: இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு, முழவு போன்ற
வாத்தியங்கள் ஒலிக்க, திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே!
நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழும்
அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர்.
கு-ரை:
இடிகுரல் இசைமுரல் - இடியின் குரல்போலும் முழவம்
முதலிய வாத்திய ஓசை ஒலிக்கும். முழவதிர மழையென்றஞ்சிச் சில
மந்தியலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே (தி.1.ப.130.பா.1.)
என முன்னும் வந்தமை காண்க. கடி கமழ் - வாசனை வீசும்; சடைமுடி.
5.
பொ-ரை: உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே,
தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே, உமை
பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப்
பெறாதவர் ஆகார்.
கு-ரை:
இமையவர் - தேவர், கண்ணிமையாதவர், இன்னம்பர் மேவிய
உடையீர் என்க. உ(ம்)மை நினைப்போர், பேரன்பு படைத்தவர் ஆவர்.
அன்பு அமைகிலர் - அன்பு அமையமாட்டாதவர். ஆகார் எனவே அன்பு
அமையப்பெற்றவர் ஆவர் என்றதாம். இரண்டு எதிர் மறை ஓர்
உடம்பாட்டை வலியுறுத்திற்று.
|