| 
         
          | 3821. | யாழ்நரம் 
            பின்னிசை யின்னம்பர் மேவிய |   
          |  | தாழ்தரு 
            சடைமுடி யீரே தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
 ஆழ்துய ரருவினை யிலரே.                  2
 |  
         
          | 3822. | இளமதி 
            நுதலியொ டின்னம்பர் மேவிய |   
          |  | வளமதி 
            வளர்சடை யீரே வளமதி வளர்சடை யீருமே வாழ்த்துவார்
 உளமதி மிகவுடை யோரே.                  3
 |  
  கருத்தும் இங்கே ஒப்பிடத் 
        தக்கது.      2. 
        பொ-ரை: யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட தாழ்ந்த
 சடைமுடியுடைய சிவபெருமானே! நீண்டு தாழ்ந்த சடைமுடியுடைய உம்மைச்
 சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள் பெருந்துன்பத்திலிருந்தும், அதற்குக்
 காரணமான அரிய வினையிலிருந்தும் நீங்கியவராவர்.
       கு-ரை: 
        யாழின் நரம்பிசை முதலிய பலவாத்திய ஓசைகளையுடைய திருவின்னம்பர் என்பது முதலடியின் கருத்து. காண்க: குழலொலி
 யாழொலிகூத்தொலியேத்தொலி யெங்கும் குழாம் பெருகி. (தி.9
 திருப்பல்லாண்டு. 11) சார்பவர் - சார்புணர்ந்து சார்புகெடச் சார்பவர்,
 பெருந்துயர் நேரினும் அதினின்றும் நீங்கப்பெறுதலோடு அதற்குக்
 காரணமாகிய அரிய வினையும் இல்லாதவர் ஆவார்கள். ஆழ்துயர் -
 பெருந்துயர்.
       3. 
        பொ-ரை: பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ச்சிபொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட
 சடையுடைய சிவபெருமானே! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த
 நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர்
 பேரறிவுடையவராவர்.
      கு-ரை: 
        இளமதி - பிறைச்சந்திரன் போன்ற. நுதலி - நெற்றியை உடைய அம்பிகை. வளம் மதி - தன்னொளி, அமுத கிரணமாயிருத்தல்,
 பயிர் பச்சைகளை வளர்த்தல், கடல் கொந்தளிப்பித்தல் முதலிய
 வளங்களையுடைய மதி. வளர் - தங்குகின்ற என்னும்
 |