| பதிக வரலாறு:      அளவில்லாத 
        ஞானாமிர்தம் உண்டவர், திருந்துதேவன் குடி அருந்தமிழ்மாலை புனைந்து, இன்னம்பர்ப்பிரானை இறைஞ்சிப் புனைந்து
 பரவிய தமிழ்த்தொடைமாலை இது.
 திருமுக்கால் 
        பண்: 
        சாதாரி
 
         
          | ப.தொ.எண்: 
            353 |  | பதிக 
            எண்: 95 |  திருச்சிற்றம்பலம் 
       
         
          | 3820. | எண்டிசைக் 
            கும்புகழி ன்னம்பர் மேவிய |   
          |  | வண்டிசைக் 
            குஞ்சடை யீரே வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
 தொண்டிசைக் குந்தொழி லோரே.             1
 |   
       
      1.பொ-ரை: 
        எட்டுத் 
        திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, வண்டு இசைக்கும்
 மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே! வண்டிசைக்கும்
 மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை வாழ்த்தும் அடியவர்கள்
 தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று மேம்படுவரே.
       கு-ரை: 
        எண்டிசைக்கும் - எட்டுத்திக்குக்களிலும், புகழ் இன்னம்பர் - புகழைப் பரப்பிய திரு இன்னம்பர், திசைக்கும் - உருபு மயக்கம். (வண்டு)
 இசைக்கும் - இசைபாடும், இசைக்கும் பெயர் அடியாகப் பிறந்த
 பெயரெச்சம், நூல் செய்யலுற்றேன் என்ற பொருளில் நூற்கலுற்றேன்
 (கம்ப. அவையடக்கம். 2) என்று கம்பர் கூறியதுபோல். வண்டிசைக்கும்
 சடையீர் என்றது மலர் மாலையணிந்த சடையீர் என்ற படி. உ(ம்)மை
 வாழ்த்துவார், (அரிபிரமனாதியருக்குத்) தொண்டு இசைக்கும் - இன்னது
 செய்க என ஏவல் இடும். தொழிலோர் - பதவியை உடையவராவர். தொண்டு
 - அடிமை. தொழில் - பதவியென்னும் பொருளில் காரணம் காரியமாக
 உபசரிக்கப்பட்டது தொழப்படும் தேவர் தம்மாற் றொழுவிக்கும் தன்
 தொண்டரையே என்ற திருவிருத்தத் (தி.4.ப.112.பா5.) தின்
 |