பதிக வரலாறு:
அளவில்லாத
ஞானாமிர்தம் உண்டவர், திருந்துதேவன் குடி
அருந்தமிழ்மாலை புனைந்து, இன்னம்பர்ப்பிரானை இறைஞ்சிப் புனைந்து
பரவிய தமிழ்த்தொடைமாலை இது.
திருமுக்கால்
பண்:
சாதாரி
ப.தொ.எண்:
353 |
|
பதிக
எண்: 95 |
திருச்சிற்றம்பலம்
3820.
|
எண்டிசைக்
கும்புகழி ன்னம்பர் மேவிய |
|
வண்டிசைக்
குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே. 1 |
1.பொ-ரை:
எட்டுத்
திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, வண்டு இசைக்கும்
மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே! வண்டிசைக்கும்
மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை வாழ்த்தும் அடியவர்கள்
தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று மேம்படுவரே.
கு-ரை:
எண்டிசைக்கும் - எட்டுத்திக்குக்களிலும், புகழ் இன்னம்பர் -
புகழைப் பரப்பிய திரு இன்னம்பர், திசைக்கும் - உருபு மயக்கம். (வண்டு)
இசைக்கும் - இசைபாடும், இசைக்கும் பெயர் அடியாகப் பிறந்த
பெயரெச்சம், நூல் செய்யலுற்றேன் என்ற பொருளில் நூற்கலுற்றேன்
(கம்ப. அவையடக்கம். 2) என்று கம்பர் கூறியதுபோல். வண்டிசைக்கும்
சடையீர் என்றது மலர் மாலையணிந்த சடையீர் என்ற படி. உ(ம்)மை
வாழ்த்துவார், (அரிபிரமனாதியருக்குத்) தொண்டு இசைக்கும் - இன்னது
செய்க என ஏவல் இடும். தொழிலோர் - பதவியை உடையவராவர். தொண்டு
- அடிமை. தொழில் - பதவியென்னும் பொருளில் காரணம் காரியமாக
உபசரிக்கப்பட்டது தொழப்படும் தேவர் தம்மாற் றொழுவிக்கும் தன்
தொண்டரையே என்ற திருவிருத்தத் (தி.4.ப.112.பா5.) தின்
|