3819. |
விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய |
|
அரைமல்கு
புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவ ருயர்வே. 10 |
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய
திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே! அரையில்
கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை
நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர்.
கு-ரை:
அரைமல்கு புலியதளீரே - அரையிற் கட்டிய புலித்தோலை
உடையீரே. மல்கு - பொருந்திய, இங்குக் கட்டிய என்னும் பொருளில்
வந்தது. உரைமல்கு புகழவர் - வார்த்தையால் உம்மை நிரம்பப்
புகழ்தலையுடையவர். அவர் உயர்வே உண்மையான உயர்வாகும்.
11.
* * * * * * * * *
குறிப்பு: இப்பதிகத்தில்
8,9,10 இப்பாசுரங்களில் ஏனைப் பதிகங்களிற் கூறும்
முறை இல்லை.
|