| 
         
          | 3819. | விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய |   
          |  | அரைமல்கு 
            புலியத ளீரே அரைமல்கு புலியத ளீரும தடியிணை
 உரைமல்கு புகழவ ருயர்வே.            10
 |   
       திருச்சிற்றம்பலம் 
      10. 
        பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
 அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே! அரையில்
 கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை
 நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர்.
       கு-ரை: 
        அரைமல்கு புலியதளீரே - அரையிற் கட்டிய புலித்தோலை உடையீரே. மல்கு - பொருந்திய, இங்குக் கட்டிய என்னும் பொருளில்
 வந்தது. உரைமல்கு புகழவர் - வார்த்தையால் உம்மை நிரம்பப்
 புகழ்தலையுடையவர். அவர் உயர்வே உண்மையான உயர்வாகும்.
       11. 
        * * * * * * * * *  குறிப்பு: இப்பதிகத்தில் 
        8,9,10 இப்பாசுரங்களில் ஏனைப் பதிகங்களிற் கூறும் முறை இல்லை.
 |