| 
         
          | 3832. | நிச்சலு 
            மடியவர் தொழுதெழு நெல்வெணெய்க் |   
          |  | கச்சிள 
            வரவசைத் தீர கச்சிள வரவசைத் தீருமைக் காண்பவர்
 அச்சமொ டருவினை யிலரே.                 2
 |  
         
          | 3833. | நிறைவிரி 
            தொல்புகழ் நெல்வெணெய் மேவிய |   
          |  | அரைவிரி 
            கோவணத் தீரே அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
 உரைவிரிப் போருயர்ந் தோரே.               3
 |  
       2. 
        பொ-ரை: நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற, நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
 இளமையான பாம்பைக் கச்சாக இடையில் அணிந்துள்ள சிவபெருமானே!
 அவ்வாறு கச்சாக இளம் பாம்பை அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே
 துன்பங்களைக் கண்டு அச்சப்படாதவர், கொடிய வினைகளும் இல்லாதவர்.
      கு-ரை: 
        நிச்சல் - நித்தல்; நித்தம் நித்தல் என்பதன் போலி, இளஅரவு- இளம்பாம்பைக் கச்சு (ஆக) அசைத்தீரே - கட்டியருளினீரே. என்றும்
 இளமையுடையவன் ஆகையால் அவனைச்சார்ந்தனவும் இளமையுடையனவே
 ஆயின, இளநாகமோடு என முன்னும் வந்தமை காண்க. (தி.1. ப.1. பா.2.)
 காண்பவர் - தரிசிப்பவர்.
      3. 
        பொ-ரை: வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெயில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
 இடையில் விரித்துக் கட்டிய கோவணத்தையுடைய சிவபெருமானே!
 அவ்வாறு கோவணத்தை விரித்துக் கட்டிய உம்மை மலர்களைக் கொண்டு
 பூசித்து, உமது புகழைப் போற்றிப் பாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        நிரை - வரிசை வரிசையாக, விரி - உலகமெங்கும் விரிந்த, (தொல் - புகழ்) அரையின் விரித்துக் கட்டிய கோவணத்தையுடையீரே.
 உம்மை அலர்கொடு - மலர் முதலியவற்றால் (பூசித்து) உமது புகழை
 விரிவாகத்துதித்துப்பாடுவோர் உயர்ந்தோர் ஆவர். பூசித்து என ஒரு
 சொல் வருவிக்க.
 |