|  
       பதிக வரலாறு:       திருநல்லத்தையும் 
        திருவழுந்தூர் மாடக்கோயிலையும் வழிபட்டதற்கு இடைக்காலத்தில் பணிந்த சிவதலங்கள் பலவுள் ஒன்றாகும் திருச்சிறு
 குடியில் அருளியது இத் திருப்பதிகம்.
 திருமுக்கால் 
        பண்: 
        சாதாரி
 
         
          | ப.தொ.எண்: 
            355 |  | பதிக 
            எண்: 97 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3842. | திடமலி 
            மதிளணி சிறுகுடி மேவிய |   
          |  | படமலி 
            யரவுடை யீரே படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
 அடைவது மமருல கதுவே.                  
            1
 |    
         
          | 3843. | சிற்றிடை 
            யுடன்மகிழ் சிறுகுடி மேவிய |   
          |  | சுற்றிய 
            சடைமுடி யீரே சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
 உற்றவ ருறுபிணி யிலரே.                   2
 |  
       1. 
        பொ-ரை: வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, படமெடுக்கும்
 பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை
 அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர்.
       கு-ரை: 
        திடம் மலி - வலிமைமிக்க. மதிள் - மதில். ல, ள ஒற்றுமை. படம் மலி - படத்தையுடைய, உம்மைப் பணிபவர் அடைவது, அமர் உலகு
 அது - வானவர் உலகிற்கு அப்பாலதாகிய சிவலோகமாம். உரையிலடங்காப்
 பெருமையது ஆகலின் அது என்று சுட்டளவோடு நிறுத்தப்பட்டது.
       2. 
        பொ-ரை: குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத்
 |