பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)97. திருச்சிறுகுடி1147

97. திருச்சிறுகுடி

பதிக வரலாறு:

     திருநல்லத்தையும் திருவழுந்தூர் மாடக்கோயிலையும் வழிபட்டதற்கு
இடைக்காலத்தில் பணிந்த சிவதலங்கள் பலவுள் ஒன்றாகும் திருச்சிறு
குடியில் அருளியது இத் திருப்பதிகம்.

திருமுக்கால்
பண்: சாதாரி

ப.தொ.எண்: 355 பதிக எண்: 97

திருச்சிற்றம்பலம்

3842. திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
  படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே.                  1

 
3843. சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
  சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவ ருறுபிணி யிலரே.                   2


     1. பொ-ரை: வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, படமெடுக்கும்
பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை
அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர்.

     கு-ரை: திடம் மலி - வலிமைமிக்க. மதிள் - மதில். ல, ள ஒற்றுமை.
படம் மலி - படத்தையுடைய, உம்மைப் பணிபவர் அடைவது, அமர் உலகு
அது - வானவர் உலகிற்கு அப்பாலதாகிய சிவலோகமாம். உரையிலடங்காப்
பெருமையது ஆகலின் அது என்று சுட்டளவோடு நிறுத்தப்பட்டது.

     2. பொ-ரை: குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக்
கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத்