| 
         
          | 3850. | செருவரை 
            வயலமர் சிறுகுடி மேவிய |   
          |  | இருவர 
            யசைவுசெய் தீரே இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்
 அருவிணை யொடுதுய ரிலரே.               9
 |  
         
          | 3851. | செய்த்தலை 
            புனலணி சிறுகுடி மேவிய |   
          |  | புத்தரோ 
            டமண்புறத் தீரே |  
  கீழ் அவனை நெரித்தவருமான 
        சிவபெருமானே! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழி
 படுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும். அது உம்மை
 வழிபட்டதன் பலனாகும்.
       கு-ரை: 
        தசம் - பத்து, உரம் - வலிமை. சார்பவர் - பற்றுக் கோடாக அடைபவர். வசையறும் அது - குற்றம் அற்றதாகிய வழிபாடே வழிபாடெனப்
 படுவதாம். என் போல்பவர் பறித்திட்ட முகையும் அரும்பும் எல்லாம்
 அம்போதெனக் கொள்ளும் ஐயன் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக்
 குணங்கொண்டு கோதாட்டுந்தன்மையால் வழிபாடு வசையற்றதாயிற்று.
       9. 
        பொ-ரை: வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், மாறுபாடு கொண்ட திருமால், பிரமன்
 இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே! அவ்விருவரையும் வருத்திய
 உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும், அதன்
 விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        இருவரை - பிரம விட்டுணுக்களை. இருவர் தொகைக் குறிப்பு. அசைவு - வருத்தம். அருவினை என்பது ஆகாமிய சஞ்சித கன்மங்களை
 துயர் என்றது பிராரத்த வினையை. அதனையிலர் என்றது, சிவனும் இவன்
 செய்தியெலாம் என் செய்தியென்றும் செய்ததெனக் கிவனக்குச் செய்த
 தென்றும் கொள்வன் ஆகையினால். (சித்தியார் சூ.10.1).
       10. 
        பொ-ரை: வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர், சமணர்கட்குப் புறம்பாக
 இருக்கும் சிவபெருமானே! புத்தர் சமணர்கட்குப் புறம்பான
 |