| 
         
          |  | புத்தரொ 
            டமண்புறத் தீருமைப் போற்றுதல் பத்தர்கள் தம்முடியப் பரிசே.               10
 |  
         
          | 3852. | தேனமர் 
            பொழிலணி சிறுகுடி மேவிய |   
          |  | மானமர் 
            கரமுடை யீரே மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
 ஞானசம் பந்தன தமிழே.                   11
 |   திருச்சிற்றம்பலம் 
  உம்மைப்போற்றி 
        வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர்.       கு-ரை: 
        செய்த்தலை - வயல்களினிடத்து. புனல் - நீர். அணி - அழகு செய்கின்ற. சிறுகுடி புறத்தீர் - அப்பாற் பட்டுரி. உம்மைப் போற்றுதலே
 பத்தர்கள் தம்முடைய பேறு ஆகக்கொள்வர். பரிசு - பேறு. கூடும்
 அன்பினிற் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
 (தி.12 திருக்கூட்டச்சிறப்பு.8) என்றதும் நோக்குக.
      11. 
        பொ-ரை: வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, மான்
 ஏந்திய கரமுடைய சிவபெருமானே! மான் ஏந்திய கரமுடைய உம்மை
 வாழ்த்திப் போற்றி ஞானசம்பந்தனின் இத்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள்
 இம்மை, மறுமைப் பலன்களைப் பெறுவர்.
       கு-ரை: 
        தேன் அமர் - வண்டுகள் விரும்பும், பொழில், மான் அமர் - மான் தங்கிய, உம்மைப் பரவிய ஞானசம்பந்தன் தமிழே
 (தனைப்பாடவல்லவர்க்கு அனைத்தும் நல்கும்) என்பது குறிப்பெச்சம்.
 |