பதிக வரலாறு;
வெங்குருவேந்தனார்
திருவீழிமிழலையிலிருந்து பாடியருளியவற்றுள் ஒன்று
இத் திருப்பதிகம்.
திருமுக்கால்
பண்:
சாதாரி
திருச்சிற்றம்பலம்
3853.
|
வெண்மதி
தவழ்மதில் மிழலையு ளீர்சடை |
|
ஒண்மதி
யணியுடை யீரே
ஒண்மதி யணியுடை யீருமை யுணர்பவர்
கண்மதி மிகுவது கடனே. 1 |
பொ-ரை:
விண்ணிலுள்ள வெண்ணிறச் சந்திரனைத் தொடுமளவு
உயர்ந்துள்ள மதில்களையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், சடையில் ஒளி பொருந்திய சந்திரனை
அணிந்துள்ளவருமான சிவபெருமானே! ஒளி பொருந்திய சந்திரனை
அணிந்துள்ள உம்மை முதற்பொருளாக உணர்ந்து வழிபடுபவர்கள்
சிவஞானம் பெறுவர்.
கு-ரை:
வெணி மதி - வானில் ஊரும் மதி. சடை மதி - சடையில்
தங்கும் மதி. மதிள் - மதில். ளகரலகர ஒற்றுமை: போலி என்னலாகாது;
சாம்பர் என்பதில் ஈற்றெழுத்து உரியதன்று; லகரனே உரியது ஆகலின்
ரகரம் போலி. ஒற்றுமை அங்ஙனமன்றி மஞ்சள், மஞ்சல், மங்களம் மங்கலம்
என ஈரெழுத்தும் உரியவாய் வருவது. மதியைச் சடையில் அணியாக
உடையார். அணி - ஆபரணம். கண் - (உமது திருவடிப் பேற்றையே
குறிக்கோளாகக்) கருதும். மதி - புத்தி. மிகுவது - அதிகரிப்பதும். அவர்க்கு
இயல்பாய் எய்திடக் கூடிய தன்மையாம். கண்மதி - வினைத்தொகை.
கண்ணுதல் இப்பொருளாதலை விண்ணினார்கள் விரும்பப்படுபவன்,
கண்ணினார் கடம்பூர்க்கரக்கோயிலே என்னுந் திருக்குறுந்தொகையால்
அறிக. உணர்பவர் - உம்மையே பதிப்பொருளாக உணர்பவர். கடன் -
இயல்பு மாலறியாக் கடனாம் உருவத்தரன் என்ற திருக்கோவையாரால்
அறிக.
|