பக்கம் எண் :

1186திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  தேனுடைமா மலரன்னம் வைகுந்
     திருநாரை யூர்மேய
ஆனிடையைந் துகந்தா னடியே
     பரவா வடைவோமே.                   9

3899. தூசுபு னைதுவ ராடைமேவுந்
       தொழிலாருடம்பினிலுள்
மாசுனைந்துடைநீத்தவர்கண்
     மயனீர்மை கேளாதே
தேசுடையீர்கள் தெளிந்தடைமின்
     திருநாரை யூர்தன்னில்
பூசுபொடித்த லைவ ரடியா
     ரடியே பொருத்தமே                  10


உடைய சிறந்த தாமரை மலரில் அன்னம் தங்க விளங்கும் திருநாரையூர்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். பசுவில் இருந்து
பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை விரும்புபவர்.
அப்பெருமானின் திருவடிகளை வணங்கி நற்கதி அடைவோமாக!

     கு-ரை: ஊன்உடை - ஊனையுடைய வெண்தலை. கொண்டு -
பாத்திரமாகக் கொண்டு. உழல்வான் - பிச்சைக்குத் திரிபவன். சடைமேல்.
வான் இடை - ஆகாயத்தில் தவழும். (மதி) வைத்து - அணிந்து ("மத்தமும்
மதியமும் வைத்திடும் அரன் மகன்" என்ற திருப்புகழிலும் இப்பொருள்
ஆண்டமை அறிக.) உகந்தான் - மகிழ்ந்தவன். மா - சிறந்த. மலர் -
தாமரை மலரில். "பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை" ஆகையால் மாமலர்
- தாமரை மலர் என்க. வரிவண்டு யாழ் போல் ஒலிக்க அவ்வோசையைக்
கேட்டுத் தாமரை மலரில் அன்னம் வைகும் திருநாரையூர். அடியையே பரவி
அடைவோமாக.

     10. பொ-ரை: மஞ்சட் காவி உடை உடுத்தும் புத்தர்களும்,
உடம்பிலும், உள்ளத்திலும், அழுக்கினைக் கொண்டு ஆடை உடுத்தலை
ஒழித்தவர்களாகிய சமணர்களும் கூறும் மயக்கும் தன்மையுடைய
மொழிகளைக் கேளாதீர்கள். மெய்யறிவுடையவர்களே! சிவபெருமானே
மெய்ப்பொருள் என்பதைத் தெளிவாக உணர்ந்து, திருநாரையூர் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு பூசிய
தலைவராகிய சிவபெருமானின் திருவடி