3900. |
தண்மதி
தாழ்பொழில் சூழ் புகலித் |
|
தமிழ்ஞான
சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யானுறையுந்
திருநாரை யூர்தன்மேல்
பண்மதி யாற்சொன்ன பாடல் பத்தும்
பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர்
வானோ ரெதிர்கொளவே. 11 |
திருச்சிற்றம்பலம்
களையும், அவர் அடியார்களின்
திருவடிகளையும் வணங்குவதே பொருந்தும்
எனக்கொண்டு அவற்றைச் சரணாக அடையுங்கள்.
கு-ரை:
தூசு - ஆடையாக. புனை - உடுக்கும். தொழிலார் - புத்தர்.
உடம்பில் - உடம்பிலும். உள் - மனத்திலும். மாசு புனைந்து - அழுக்கையும்,
அறியாமையையும் அணிந்து. உடை நீத்தவர்கள் - ஆடையை நீக்கியவராகிய
சமணர். ஒழிப்பவற்றைக் கொண்டும் கொள்வனவற்றை யொழித்தும்
உள்ளவரென்ற குறிப்பு. மயல் நீர்மை - மயக்கும் உபதேசங்களைக் கேளாது.
தேசு உடையீர்கள் - மெய்யறிவுடையீர்களே. தெளிந்து - சிவனே
பொருளெனத் தெளிவாக உணர்ந்து. பூசு பொடித் தலைவர் - திருநீறு பூசிய
தலைவர். அடியே பொருத்தம் ஆம் - பொருந்துவது ஆகும். அவ்வடியையே
அடைமின்.
11.
பொ-ரை: குளிர்ச்சி பொருந்திய சந்திரன் தவழ்கின்ற சோலைகள்
சூழ்ந்த திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் வல்ல
ஞானசம்பந்தன், ஒளி பொருந்திய சந்திரனை அணிந்த சடையையுடைய
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருநாரையூர் என்னும் திருத்
தலத்தின் மேல், பயில்வோருக்கு இசையறிவு உண்டாகும் வண்ணம்
பாடியருளிய இப்பாடல்கள் பத்தையும் பயின்று ஓத வல்லவர்கள் மண்ணுலக
வாழ்க்கை நிலையற்றதென உணர்ந்து அதனை மதியாது, தேவர்கள் எதிர்
கொண்டழைக்க வானுலகை அடைவர்.
கு-ரை:
தண் மதி தாழ் பொழில் - சந்திரன் தங்கும் சோலை சூழ்
புகலித் தமிழ் ஞானசம்பந்தன் திருநாரையூர் தன்மேல் பண்மதியால் சொன்ன.
(பயில்வோர்க்கு) இசையறிவு உண்டாகும் வகையாற் பாடிய பாடல் பத்தும்
பயின்றார். வினை போகி - வினை நீங்கப் பெற்று. மண் - மண்ணுலக
இன்பை மதியாது போய் வானோர் எதிர் கொள்ள வான் புகுவர்.
|