3968. |
வந்துமா
லயனவர் காண்பரியார் |
|
வெந்தவெண்
ணீறணி மயேந்திரரும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தணா ரூராதி யானைக்காவே. 2 |
3969. |
மாலயன்
றேடிய மயேந்திரரும் |
|
காலனை
யுயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலையா ரூராதி யானைக்காவே. 3 |
3970. |
கருடனை
யேறரி யயனோர்காணார் |
|
வெருள்விடை
யேறிய மயேந்திரரும் |
2.
பொ-ரை: சிவபெருமான், திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்தவராய்த்
திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும் சடையுடையவராய்த்
திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க திருவாரூரிலும், பழமை வாய்ந்த
திருவானைக்காவிலும் விளங்குபவர்.
கு-ரை:
கந்தவார் சடை - வாசனை பொருந்திய நெடிய சடை.
3.
பொ-ரை: திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான்
திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே மார்க்கண்டேயருக்காகக்
காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக
விளங்கும் திருஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ்
வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை உடைய திருவாரூரில்
வீற்றிருந்தருளுபவரும் அவரே.
கு-ரை:
வேலை (அது) ஓங்கும் வெண்ணாவல் - கடல்போல் நீர்
பொங்கப் பெற்ற வெண்ணாவல். பஞ்சபூதத் தலங்களில் அப்புத்தலம்
ஆதலாலும், செழுநீர்த் திரளைச்சென்று ஆடினேனே (தி.6.ப.63.பா.1) என
அப்பர் அடிகள் கூறியவாறு, இறைவனே நீர்வடிவாய் இருத்தலாலும்,
வேலையது ஓங்கும் என்று கூறப்பட்டது. ஆலை ஆரூர் - கருப்பங்
கழனிகளையுடைய திருவாரூர். ஆலை என்பது தானியாகு பெயர்.
4.
பொ-ரை: கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும்
காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடப
|