பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)109. திருக்கயிலாயமும் திருஆனைக்காவும் - திருமயேந்திரமும் திருஆரூரும்1239

3968. வந்துமா லயனவர் காண்பரியார்
  வெந்தவெண் ணீறணி மயேந்திரரும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தணா ரூராதி யானைக்காவே.              2

3969. மாலயன் றேடிய மயேந்திரரும்
  காலனை யுயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலையா ரூராதி யானைக்காவே.              3

3970. கருடனை யேறரி யயனோர்காணார்
  வெருள்விடை யேறிய மயேந்திரரும்


     2. பொ-ரை: சிவபெருமான், திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்தவராய்த்
திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும் சடையுடையவராய்த்
திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க திருவாரூரிலும், பழமை வாய்ந்த
திருவானைக்காவிலும் விளங்குபவர்.

     கு-ரை: கந்தவார் சடை - வாசனை பொருந்திய நெடிய சடை.

     3. பொ-ரை: திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான்
திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே மார்க்கண்டேயருக்காகக்
காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக
விளங்கும் திருஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ்
வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை உடைய திருவாரூரில்
வீற்றிருந்தருளுபவரும் அவரே.

     கு-ரை: வேலை (அது) ஓங்கும் வெண்ணாவல் - கடல்போல் நீர்
பொங்கப் பெற்ற வெண்ணாவல். பஞ்சபூதத் தலங்களில் அப்புத்தலம்
ஆதலாலும், “செழுநீர்த் திரளைச்சென்று ஆடினேனே” (தி.6.ப.63.பா.1) என
அப்பர் அடிகள் கூறியவாறு, இறைவனே நீர்வடிவாய் இருத்தலாலும்,
வேலையது ஓங்கும் என்று கூறப்பட்டது. ஆலை ஆரூர் - கருப்பங்
கழனிகளையுடைய திருவாரூர். ஆலை என்பது தானியாகு பெயர்.

     4. பொ-ரை: கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும்
காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடப