பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)109. திருக்கயிலாயமும் திருஆனைக்காவும் - திருமயேந்திரமும் திருஆரூரும்1243

மறிகட லோனயன் றேடத்தானும்
அறிவரு கயிலையோ னானைக்காவே.          10

3977. ஏனமா லயனவர் காண்பரியார்
  கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனவா ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் றமிழ்சொல்லுமே.            11

 திருச்சிற்றம்பலம்


கொள்ளும் திருமாலும், பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில்
வீற்றிருந்தருளும் சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய மான்கன்றைக்
கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும், திருவானைக்காவிலும்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: வெறிய மான் கரத்து ஆரூரர் - மருண்டு நோக்குதலையுடைய
மானை ஏந்திய கையையுடைய ஆரூரர். வெறிய - குறிப்புப் பெயரெச்சம்.
ஆரூர் - என்பதற்குமேல் எட்டாவது பாட்டுக் குறிப்புக் காண்க. மறி -
மடக்கி வீசும் அலைகளையுடைய. கடலோன் - பாற்கடலில் துயில்வோனாகிய
திருமால். அறிவு அரு - அறிவதற்கரிய.

     11. பொ-ரை: பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருக்கயிலையிலும்,
நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும், திருவானைக்காவிலும்
வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய சிவபெருமானைப் போற்றி ஞானசம்பந்தர்
அருளிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப்
பெறுவார்கள்.

     கு-ரை: ஏனம் மால் - பன்றி உருவமெடுத்த திருமால். கானம் ஆர்
கயிலை - சோலைகள் சூழ்ந்த கயிலை. தமிழ் சொல்லுமே - தமிழைப்
பாடுவீர்களாக. பாடின் பெறலரும் பயன் பெறுவீர் என்பது குறிப்பெச்சம்.
பதிகக்குறிப்பு:- ஒவ்வொரு பாடலிலும் நான்கு தலங்கள் குறிக்கப்
பட்டதாதலால் கூடற் சதுக்கம் என்னப்பட்டது. சதுஷ்கம் என்பது வடசொல்.
ஒவ்பொரு பாடலிலும் திருமாலும் பிரமனும் காணமுடியாதவர் என்று
குறிக்கப்படுகிறது. திருமாலின் பல தன்மைகள் பதிகத்தில் குறிக்கப்படுகின்றன.
நான்கு தலங்களையும்