|
மறிகட
லோனயன் றேடத்தானும்
அறிவரு கயிலையோ னானைக்காவே. 10 |
3977. |
ஏனமா
லயனவர் காண்பரியார் |
|
கானமார்
கயிலைநன் மயேந்திரரும்
ஆனவா ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் றமிழ்சொல்லுமே. 11 |
திருச்சிற்றம்பலம்
கொள்ளும் திருமாலும்,
பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில்
வீற்றிருந்தருளும் சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய மான்கன்றைக்
கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும், திருவானைக்காவிலும்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
வெறிய மான் கரத்து ஆரூரர் - மருண்டு நோக்குதலையுடைய
மானை ஏந்திய கையையுடைய ஆரூரர். வெறிய - குறிப்புப் பெயரெச்சம்.
ஆரூர் - என்பதற்குமேல் எட்டாவது பாட்டுக் குறிப்புக் காண்க. மறி -
மடக்கி வீசும் அலைகளையுடைய. கடலோன் - பாற்கடலில் துயில்வோனாகிய
திருமால். அறிவு அரு - அறிவதற்கரிய.
11.
பொ-ரை: பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருக்கயிலையிலும்,
நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும், திருவானைக்காவிலும்
வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய சிவபெருமானைப் போற்றி ஞானசம்பந்தர்
அருளிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப்
பெறுவார்கள்.
கு-ரை:
ஏனம் மால் - பன்றி உருவமெடுத்த திருமால். கானம் ஆர்
கயிலை - சோலைகள் சூழ்ந்த கயிலை. தமிழ் சொல்லுமே - தமிழைப்
பாடுவீர்களாக. பாடின் பெறலரும் பயன் பெறுவீர் என்பது குறிப்பெச்சம்.
பதிகக்குறிப்பு:- ஒவ்வொரு பாடலிலும் நான்கு தலங்கள் குறிக்கப்
பட்டதாதலால் கூடற் சதுக்கம் என்னப்பட்டது. சதுஷ்கம் என்பது வடசொல்.
ஒவ்பொரு பாடலிலும் திருமாலும் பிரமனும் காணமுடியாதவர் என்று
குறிக்கப்படுகிறது. திருமாலின் பல தன்மைகள் பதிகத்தில் குறிக்கப்படுகின்றன.
நான்கு தலங்களையும்
|