| 
         
          | 3994. | போதகந்தனை 
            யுரிசெய்தோன்புய |   
          |  | னேர்வரும்பொழின் 
            மிழலைமாநகர் ஆதரஞ்செய்த வடிகள்பாதம்
 அலாலொர்பற் றிலமே.                
            5
 |  
         
          | 3995. | தக்கன்வேள்வியைச் 
            சாடினார்மணி |   
          |  | தொக்கமாளிகை 
            மிழலைமேவிய நக்கனாரடி தொழுவர் மேல்வினை
 நாடொறுங் கெடுமே.                  6
 |    
         
          | 3996.. | போரணாவுமுப் 
            புரமெரித்தவன் |   
          |  | பொழில்கள்சூழ்தரு 
            மிழலைமாநகர்ச் சேருமீசனைச் சிந்தைசெய்பவர்
 தீவினை கெடுமே.                    7
 |  
       5. 
        பொ-ரை: செருக்குடன் முனிவர்களால் கொடுவேள்வியினின்றும் அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான்,
 மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
 விரும்பி வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிகளைத்தவிர
 வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை.
       கு-ரை: 
        போதகம் - யானை. புயல் நேர் வரும் - மேகங்கள் படியும். ஆதரம் செய்த அடிகள் - விரும்பித் தங்கிய சிவபெருமான்.
       6. 
        பொ-ரை: சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர். இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை
 என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின்
 திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது.
       கு-ரை: 
        சாடினார் - மோதி அழித்தார். மணி தொக்க மாளிகை - இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாளிகை. நக்கனார் - ஆடையில்லாதவர்,
 தொழுவார்மேல் - தொழுவார்கள் இடத்து.
       7. 
        பொ-ரை: போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான், சோலைகள்
 |