| 
         
          | 3997. | இரக்கமிஃறொழி 
            லரக்கனாருட |   
          |  | னெருக்கினான்மிகு 
            மிழலையானடி சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ்
 பரக்குநீள் புவியே.                    8
 |  
         
          | 3998. | துன்றுபூமகன் 
            பன்றியானவ |   
          |  | னொன்றுமோர்கிலா 
            மிழலையானடி சென்றுபூம்புன னின்றுதூவினார்
 நன்றுசேர் பவரே.                     9
 |  
  சூழ்ந்த திருவீழிமிழலை 
        என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை
 அழிந்துவிடும்.
       கு-ரை: 
        போர் அணாவு - போரை மேற்கொண்ட.       8. 
        பொ-ரை: இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த
 சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்
 மேல் வைத்த மலர்போலக் கொண்டு, சிந்தையை ஒருமுகப்படுத்தி
 வழிபடுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவர்.
       கு-ரை: 
        இரக்கமிஃறொழில் (இரக்கம் இல் தொழில்) - குறில் வழி லளத்தவ் அணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழியானே
 (நன்னூல். 228) என்பது விதி. சிரக்கொள் பூவென (சிரம்கொள் பூவென) -
 தலையில் அணியும் பூவைப்போல. எதுகை நோக்கி சிரக்கொள் என
 வலித்தது. ஒருக்கினார் - சிந்தையை ஒருமைப் படுத்தினவர்.
       9. 
        பொ-ரை: இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமனும், பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவ
 பெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
 அப்பெருமானின் திருவடிகளை, பூவும், நீரும் கொண்டு பூசிப்பவர்கள், முத்தி
 பெறுவர்.
       கு-ரை: 
        துன்று பூமகன் - (பூ துன்று மகன்) பூவில் வாழும் பிரமன். சென்று - திருவீழிமிழலைக்குச் சென்று. மிழலையானடி - அக்
 |