| 
         
          | 4007. | பைங்கணேற்றினர் 
            திங்கள்சூடுவர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தெங்குமா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               7
 |  
         
          | 4008. | பாதங்கைதொழ 
            வேதமோதுவர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தாதியா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               8
 |   
       
         
          | 4009. | படிகொண்மேனியர் 
            கடிகொள்கொன்றையர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தடிகளா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               9
 |  
      7. 
        பொ-ரை: இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
 பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும்
 வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்?
       கு-ரை: 
        எங்குமாய்ப் பல்லவனீச்சரத்து இருப்பார் என்றது:- அகண்டிதன் ஆகி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அடியாரை
 ஆட்கொள்வான் வேண்டி, குருலிங்கசங்கமங்களில் கண்டனாய்த் தோன்றும்
 தன்மை விளக்கியவாறு. கண்டன் சிறு அளவில் காணப்படுபவன்.
 கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே என்ற திரு
 நேரிசையால் அறிக.
       8. 
        பொ-ரை: தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார்.
 காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும்
 ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையை யார் அறிவார்?
      கு-ரை: 
        பாதம் கை தொழ - தமது திருவடிகளைக் கையால் தொழுது உய்தி கூடும் பொருட்டு. வேதம் ஓதுவார் - வேதம் முதலிய
 நீதிகளை உபதேசித்தருள்பவர். வேதம், என்பது உபலட்சணம்.
       9. 
        பொ-ரை: இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு  |