4007. |
பைங்கணேற்றினர்
திங்கள்சூடுவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 7 |
4008. |
பாதங்கைதொழ
வேதமோதுவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 8 |
4009. |
படிகொண்மேனியர்
கடிகொள்கொன்றையர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 9 |
7.
பொ-ரை: இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல்
ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும்
வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்?
கு-ரை:
எங்குமாய்ப் பல்லவனீச்சரத்து இருப்பார் என்றது:-
அகண்டிதன் ஆகி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அடியாரை
ஆட்கொள்வான் வேண்டி, குருலிங்கசங்கமங்களில் கண்டனாய்த் தோன்றும்
தன்மை விளக்கியவாறு. கண்டன் சிறு அளவில் காணப்படுபவன்.
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே என்ற திரு
நேரிசையால் அறிக.
8.
பொ-ரை: தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர்
நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார்.
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும்
ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையை யார் அறிவார்?
கு-ரை:
பாதம் கை தொழ - தமது திருவடிகளைக் கையால்
தொழுது உய்தி கூடும் பொருட்டு. வேதம் ஓதுவார் - வேதம் முதலிய
நீதிகளை உபதேசித்தருள்பவர். வேதம், என்பது உபலட்சணம்.
9.
பொ-ரை: இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு
|