பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)112. திருப்பல்லவனீச்சுரம்1259

4007. பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               7

4008. பாதங்கைதொழ வேதமோதுவர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               8

 
4009. படிகொண்மேனியர் கடிகொள்கொன்றையர்
     பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               9


     7. பொ-ரை: இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல்
ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும்
வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்?

     கு-ரை: எங்குமாய்ப் பல்லவனீச்சரத்து இருப்பார் என்றது:-
அகண்டிதன் ஆகி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அடியாரை
ஆட்கொள்வான் வேண்டி, குருலிங்கசங்கமங்களில் கண்டனாய்த் தோன்றும்
தன்மை விளக்கியவாறு. கண்டன் சிறு அளவில் காணப்படுபவன்.
“கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே” என்ற திரு
நேரிசையால் அறிக.

     8. பொ-ரை: தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர்
நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார்.
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும்
ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையை யார் அறிவார்?

     கு-ரை: பாதம் கை தொழ - தமது திருவடிகளைக் கையால்
தொழுது உய்தி கூடும் பொருட்டு. வேதம் ஓதுவார் - வேதம் முதலிய
நீதிகளை உபதேசித்தருள்பவர். வேதம், என்பது உபலட்சணம்.

     9. பொ-ரை: இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு