| 
         
          | 4010. | பறைகொள்பாணியர் 
            பிறைகொள்சென்னியர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் திறைவரா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               10
 |  
         
          | 4011. | வானமாள்வதற் 
            கூனமொனறிலை |   
          |  | மாதர்பல்லவ 
            னீச்சரத்தானை ஞானசம்பந்தன் நற்றமிழ்
 சொல்லவல்லவர் நல்லவரே.            11
 |   திருச்சிற்றம்பலம் 
  மேனியாகக் கொண்டவர். 
        நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய்
 விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார்?
       கு-ரை: 
        படிகொள் - பல்வேறு வடிவங்களில் திருவுடம்பு கொள்பவர். கடி - வாசனை.
       10. 
        பொ-ரை: இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன். பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப்
 பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன்.
 இவர் தன்மை யார் அறிவார்?
       கு-ரை: 
        பறை - வாத்தியம்.       11. 
        பொ-ரை: அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்
 பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர். அவர்கள்
 மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை.
       கு-ரை: 
        ஊனம் - தடை. மாதர் - அழகிய.  |