4010. |
பறைகொள்பாணியர்
பிறைகொள்சென்னியர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 10 |
4011. |
வானமாள்வதற்
கூனமொனறிலை |
|
மாதர்பல்லவ
னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ்
சொல்லவல்லவர் நல்லவரே. 11 |
திருச்சிற்றம்பலம்
மேனியாகக் கொண்டவர்.
நறுமணம் கமழும் கொன்றை மாலையை
அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய்
விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார்?
கு-ரை:
படிகொள் - பல்வேறு வடிவங்களில் திருவுடம்பு கொள்பவர்.
கடி - வாசனை.
10.
பொ-ரை: இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன்.
பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன்.
இவர் தன்மை யார் அறிவார்?
கு-ரை:
பறை - வாத்தியம்.
11.
பொ-ரை: அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து
இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்
பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர். அவர்கள்
மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை.
கு-ரை:
ஊனம் - தடை. மாதர் - அழகிய.
|