|  சொரியும் துன்பக் 
        கண்ணீரைத் தீர்த்திடும். எல்லாம் சிவன் செயல் என்பதை நிச்சயித்து, புகலியில் அவதரித்த பூசுரனான திருஞான சம்பந்தன், அந்தமில்
 பொருளாந்தன்மையை உட்கொண்டு, சிவபெருமானின் புகழையே
 பொருளாகக் கொண்டு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள்
 பக்தியில் மேம்பட்டு எல்லாம் கைகூடப்பெறுவர்.
       கு-ரை: 
        கம்பமே - திரு ஏகம்பத்தையே. காதல் செய்பவர் - விரும்புபவர்கள். தீர்ந்திடு(தல்) உகு அம்பம் - (வருந்திச்) சொரிகின்ற
 துக்கக் கண்ணீர், தீர்த்திடுதல் முதனிலைத் தொழிற்பெயர். அம்பம் - அம்
 சாரியை, அம்பு - தண்ணீர். புந்தி செய்து - எல்லாம் சிவன் செயலாகப்
 பாவித்து. விரும்பி - விருப்பங்கொண்டு. புகலியே - சீகாழியையே
 இருப்பிடமாகக் கொண்ட. பூசுரன்தன் - சம்பந்தப்பெருமானின், விரும்பிப்
 புகலியே - விரும்பிச் சரண்புக்க, இடமானவன். அந்தமில் பொருள் ஆயின
 கொண்டு - அழிவிலாப் பொருளாந்தன்மையை உட்கொண்டு. அண்ணலின்
 - சிவபெருமானின், பொருளாயின கொண்டு - புகழை விஷயமாகக் கொண்டு
 பாடிய பத்தும் வல்லவர்க்கு. ஆயின - உரிய ஆயின. பத்தும் - பத்தியின்
 வகைகளும் - ஆயின என்ற பண்பைப் பயனிலையாற் பத்தியின் வகைகள்
 என எழுவாய் கூறப்பட்டது. பத்தியின் வகைகள் பத்திசெலுத்தும் வகைகள்.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம் திருவேகம் 
              பத்தமர்ந்த செழுஞ்சுடரைச் சேவடியில்ஒருபோதும் தப்பாதே உள்ளுருகிப் பணிகின்றார்
 மருவுதிரு யமகமும் வளர் இருக்குக் குறள்மற்றும்
 பெருகும் இசைத் திருப்பதிகத் தொடைபுனைந்தார்
 பிள்ளையார்.
 -சேக்கிழார்.
 |  |