4036. |
பாதியாவுடன்
கொண்டது மாலையே |
|
பாம்புதார்மலர்க்
கொன்றைநன் மாலையே
கோதினீறது பூசிடு மாகனே
கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதனாடொறு மாடுவ தானையே
நாடியன்றுரி செய்தது மானையே
வேதநூல்பயில் கின்றது வாயிலே
விகிர்தனூர்திரு வாலநல் வாயிலே. 2 |
புரபங்கன் - தமது
திருவடியைத் துதியாதவராகிய அசுரர் இருந்த
திரிபுரத்தை அழித்தவன். கோலம் நீறு அணி - அழகிய திருநீற்றைப் பூசிய.
மேதகுபூதனே -சிறந்த பூதகணங்களை உடையவனே. கோது இலார் -
குற்றமற்ற அடியாரது. மனம் மேவிய - மனத்தின் கண் தங்கிய. பூதன் -
உயிர்க்கு உயிராய் இருப்பவனே. பூதம் - உயிர். பூதம் யாவையின் உள்
அலர் போதென எனவரும் சேக்கிழார் திருவாக்கால் அறிக. (தி. 12
திருமலைச் சிறப்பு பா. 33) களத்தன் - கண்டத்தை உடையவன்.
அண்டர்கள் அத்தன் - தேவர்களுக்குத் தந்தை. மேவி அபூதனெனலே
பொருந்துவது - பொருந்திக் காணப்படாதவன்.
2.
பொ-ரை: சிவபெருமான் தம் உடம்பில் பாதியாகக் கொண்டது
திருமாலை. பாம்பும், கொன்றை மலரும் அவருக்கு நன்மாலைகளாகும்.
குற்றமற்ற திருநீறு பூசிய மார்பை உடையவர். இடத் திருக்கரத்தில் மானை
ஏந்தியுள்ளவர். அவர் நாள்தோறும் அபிடேகம் கொள்வது பஞ்ச
கவ்வியத்தால். அவர் உரித்தது யானையை. வேத நூல்களை அருளுவது
அவரது திருவாய். விகிர்தரான அவர் விரும்பி வீற்றிருந்தருளுவது திரு
ஆலவாய்.
கு-ரை:
பாதியா - உடம்பில் பாதியாக. மாலை - திருமாலை. (சங்கர
நாராயண வடிவம்) ஆகன் - மார்பை உடையவன் கையில் மான்இடம்,
ஆகன் - ஆகியவன். ஆகு + அன் = இரண்டு உறுப்பால் முடிந்த பகுபதம்.
ஆடுவது ஆன் ஐ - அபிடேகம் கொள்வது பஞ்சகவ்யம். உரிசெய்ததும் -
உரித்ததும். வேதநூல் பயில்கின்றது - வேதநூலைப் படிப்பது. வாயிலே -
தமது திருவாயினால். விகிர்தன் ஊர் நல் திருவாலவாயில் - ஊராக
இருப்பது நல்ல திருவாலவாயில்.
|