4133. |
அடையலர்
தொன்னகர் மூன்றெரித் தன்ன |
|
நடைமட
மங்கையொர் பாக நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே. 3 |
4134. |
வளங்கிளர்
கங்கை மடவர லோடு |
|
களம்பட
ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே. 4 |
ஒளிமிக்க பாம்பை
ஆட்டுதலை விரும்பி நின்றீர். அலைகளையுடைய
கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு
ஆடுகின்றீர்.
கு-ரை:
அரவு ஆட்டு உகந்தீர் - பாம்பை ஆட்டுதலை விரும்பினீர்.
3.
பொ-ரை: திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை
அணிந்துள்ள சங்கரராகிய நீர் பகைவருடைய தொன்மையான மூன்று
நகரங்களையும் எரித்தீர். அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை
ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்துள்ளீர். எருதின்மீது விருப்பத்துடன்
ஏறுகின்றீர்.
கு-ரை:
அடையலர் - பகைவர்; நகர்மூன்று - திரிபுரம்.
4.
பொ-ரை: குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த
திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய எம்
பெருமானே! வளங்களைப் பெருக்குகின்ற கங்கையாளொடு சுடுகாட்டு
அரங்கமே இடமாகக் கொண்டு ஆடுகின்றீர்.
கு-ரை:
வளம் கிளர் கங்கை - பாய்தலால் வளங்கள் அதிகரித்தற்குக்
காரணமாகிய கங்கை. அரங்கு ஆக - காடு அரங்கு களம் ஆகப் பட
ஆடுதிர் எனக்கூட்டிச் சுடுகாடு அரங்கினிடமாகக் கொண்டு ஆடுதிர் எனப்
பொருள் கூறுக.
|