|
உறும்பொரு
ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே. 11 |
திருச்சிற்றம்பலம்
என்னும் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய
சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப்
பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம்
வாய்க்கும்.
கு-ரை:
நறும்பொழில் - நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த. காழியுள் - சீகாழியுள் அவதரித்தருளியவராகிய.
ஞானசம்பந்தன் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராகிய யான். பெறும் - பெறுதற்குரிய,
பதம் - பதவியை. அருளும் நல்லூர்ப் பெருமானைத்தானை - திரு நல்லூர்ப் பெருமணத்தில்
எழுந்தருளிய சிவலோகத் தியாகேச மூர்த்தியை, உறும் - திருவடியில் இரண்டறக் கலக்கும்.
பொருளால் - கருத்தோடு. சொன்ன - பாடிய. ஒண் தமிழ் - சிறந்த பயனைத் தரவல்ல,
தமிழ் - இத்தமிழ்ப் பதிகத்தை. வல்லார் - பொருள் அமைதியோடு இன்னிசையால் மனங்கசிந்து
பாடவல்லார்க்குப் பழிபாவம் அறும். (அதுவன்றியும்), அவலம் - பிறவித்துன்பம். இலர்
- இலராவர். அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் எய்துவர் என்பது குறிப்பு.
திருஞானசம்பந்த
சுவாமிகள் - மூன்றாம் திருமுறை
பொழிப்புரை குறிப்புரைகளோடு நிறைவுற்றது.
|
பதிகங்கள்
|
பாடல்கள் |
|
|
|
முதல்
திருமுறை |
136
|
1469 |
|
|
|
இரண்டாம்
திருமுறை |
122
|
1331 |
|
|
|
மூன்றாம்
திருமுறை |
125 |
1347 |
|
|
|
பிற்சேர்க்கை |
1
|
11 |
|
|
|
|
----
|
---- |
|
|
|
ஆக |
384
|
4158 |
|
|
|
|
----
|
---- |
|
|