பக்கம் எண் :

430திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப்பெற்று
விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும்
இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.

     கு-ரை: இலைநுனி வேற்படை - இலைபோன்ற நுனியையுடைய
திரிசூலம்; "இலைமலிந்த மூவிலைய சூலத்தினானை" என்புழியும் (திருமறை7)
காண்க. 'விலையுடை அருந்தமிழ்மாலை' இப்பதிகம். தந்தையார் பொருட்டுப்
பொன்பெறுவது. ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் எனப்பாடினமையால்
இங்ஙனம் விலையுடையருந்தமிழ்மாலை எனப்பட்டது.

         திருஞானசம்பந்தர் புராணம்
சென்று தேவர்தம் பிரான்மகிழ் கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார் நீள்நிதி வேண்டினார்க் கீவ
தொன்றும் மற்றிலேன் உன்னடி அல்லதொன் றறியேன்
என்று பேரருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்.
எடுத்த வண்டமிழ்ப் பதிகநா லடியின்மேல் இருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன் னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித் தஞ்சலி அளித்தார்.
நச்சி இன்தமிழ் பாடிய ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய இறைவர்இன் அருளால்
அச்சி றப்பருள் பூதமுன் விரைந்தகல் பீடத்
துச்சி வைத்தது பசும்பொன்ஆ யிரக்கிழி ஒன்று.
                              -சேக்கிழார்.