பதிக
வரலாறு:
திருப்புகலியிலிருந்து திருத்தோணியப்பரைத் தொழுது
பாடிய விகற்பச் செய்யுள் மாலைகளுள் ஒன்று இத்திருப்பதிகம். ஈரடிமேல் வைப்பு
பண்: காந்தார பஞ்சமம்
ப.தொ.எண்: 263 |
|
பதிக
எண்: 5 |
திருச்சிற்றம்பலம்
2845. |
தக்கன்
வேள்வி தகர்த்தவன் பூந்தராய் |
|
மிக்க
செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன் தானே. 1 |
2846. |
புள்ளி
னம்புகழ் போற்றிய பூந்தராய் |
|
வெள்ளம்
தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
மூலம் ஆய முதலவன் தானே. 2 |
1, பொ-ரை:
சிவனை மதியாது தக்கன் செயத் யாகத்தைத்
தகர்த்தவனாகிய, திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த
சிறப்புடைய, இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின்
பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள். அனைத்துயிர்கட்கும்
நன்மையைச் செய்கின்ற, அனைவராலும் விரும்பப்படுகின்ற அச்சிவ
பெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான்.
கு-ரை:
தக்கன் வேள்வி தகர்த்தவனாகிய பூந்தராய் நிமலனது
பெருமை பொருந்திய திருவடிகளை என முதலிரண்டடிக்குக் கூட்டியுரைக்க.
மிக்க செம்மை - மேலான வீட்டு நெறியை அருளும். விமலன் - அமலன்.
தன்னைச்சார்ந்த உயிர்களின் மலத்தை யொழிப்பவன் என்றும், இயல்பாகவே
பாசங்களினின்று நீங்கியவன் என்றும் பொருள்.
2. பொ-ரை:
பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப்பூந்தராய்
என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கி
|