|
கடமணி
மாவுரித் தோலினா னுங்கட |
| |
வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர
னல்லனே. 5 |
| 2883. |
பண்பொலி
நான்மறை பாடியா டிப்பல |
| |
வூர்கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி
மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட
வூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர
னல்லனே. 6 |
வனும், அசைகின்ற
படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள
கடவுளும், மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும்,
திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும்
வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? விடமணிகண்டன்-
நீலமணி மிடற்று ஒருவன் போல (ஒளவையார், புறநானூறு) நினைவுகூர்க.
கு-ரை:சுடர்மணி-ஒளிர்கின்ற
உருத்திராக்க மணி, சுழல்வு ஆயது ஓர்
படம் மணிநாகம் அரைக்கு அசைத்த-மண்டலம் இடுகிறதாகிய ஒரு பாம்பை
இடுப்பிற் கட்டிய. கடம் அணி-மா மதத்தையுடைய அழகிய யானை.
6.
பொ-ரை: நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும்,
நடனம் ஆடுபவனும், பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில்
பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை உடையவனும், வானில்
ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும்,
திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்து
அரன் அல்லனோ?
கு-ரை:
உழல்வான்-சுற்றித்திரிவான். கண்பொலி நெற்றி வெண்
திங்களான்-கண் விளங்குகின்ற நெற்றியின்மீது வெள்ளிய சந்திரனை
அணிந்தவன். வெண்பொடி பூசி-வெண்மையான திருநீற்றைப் பூசியவன்.
|