பக்கம் எண் :

458திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட
       வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர
     னல்லனே. 8

2886. வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர்
       போதின்கண்
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந்
     தேத்தவே
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட
     வூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர
     னல்லனே. 9


மூர்த்தியும், முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை
ஏந்தியுள்ளவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள
அரன் அல்லனோ?

     கு-ரை:ஐந்நான்கிருபது தோள்-ஐந்நான்காகிய இருபது தோள்.
தசம்-பத்து. மூர்க்கு-மூர்க்கத்தன்மை. வெடி-முடைநாற்றம்.

     9. பொ-ரை:கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப்
பெருமழையிலிருந்து ஆக்களையும், ஆயர்களையும் காத்த திருமாலும்,
குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற்பொருள்
என உணர்ந்து துதிக்க, பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக்
காக்கின்றவன், திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய
வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ?

     கு-ரை:வரை-கோவர்த்தன மலை. மழை தாங்கினான்-கண்ணனாகிவந்த
திருமால். புரைகடிந்த-குற்றம்நீங்கி. நான் முகத்தான்-நான்முகத்தானும் என்க.
உம்மை விகாரத்தால் தொக்ககது. புரிந்து-விரும்பி. கரை-எல்லை.