பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)08. திருக்கடவூர்வீரட்டம்459

2887. தேரரும் மாசுகொள் மேனியா ரும்தெளி
       யாததோர்
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம
     தாதியான்
காரிளங் கொன்றைவெண்டிங்களா னுங்கட
     வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர
     னல்லனே. 10

2888. வெந்தவெண் ணீரணி வீரட்டா னத்துறை
       வேந்தனை
அந்தணர் தங்கட வூருளா னைஅணி
     காழியான்


     10. பொ-ரை:புத்தர்களும், அழுக்கு உடம்பையுடைய சமணர்களும்
தெளிந்தறிதற்கரிய சொல்லும், பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான்,
கார்காலத்தில்மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும்,
வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடியுள்ளவனும், வீரக்கழல்களை
அணிந்துள்ளவனும் ஆகிய, திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில்
எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ?

     கு-ரை:தேரர்-புத்தர். மாசுகொள் மேனியர்-அழுக்குடைய
உடம்பையுடைய சமணர். குளித்தால் நீரில் உள்ள சிறு உயிர்கள் இறந்து
விடுமேயென்று நீராடாமையால் மாசுகொள் மேனியர் ஆவர். ஆர் அரும்
சொல் பொருளாகி நின்ற-நிறைந்த அரிய சொல்லும் பொருளுமாகி நின்ற.
கார் இளங் கொன்றை-கார் காலத்தில் மலரக் கூடிய இளம் கொன்றை,
அன்றலர்ந்த கொன்றைப்பூ. கொன்றை வெண்டிங்களானும்-
கொன்றைமாலையோடணிந்த வெள்ளிய சந்திரனையுடையவனும், வீரமும்
சேர் கழல்-அதுவே பின் கருணையும் செய்தது என்னும் பொருள் தரலால்
எதிரது தழுவிய எச்சவும்மை.

     11. பொ-ரை:விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை
அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய், அந்தணர்கள் வழிபாடு
செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை, அழகிய சீகாழியில்அவதரித்த
வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை
இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம்
கெடும்.