|
சந்தமெல்
லாம்அடிச் சாத்தவல் லமறை |
|
ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும்
பாவமே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:சந்தம்
எல்லாம் அடிச்சாத்தவல்ல-அழகிய சந்தப்
பாடல்களையெல்லாம் திருவடிக்குச் சாத்தவல்ல (ஞானசம்பந்தன்) சந்தம்-
பண்பாகு பெயர். வெந்த-விதிப்படி செய்யப்பட்ட கற்பநீறு. அந்தணர்-
மாதவக்கலயர் முதலோர். அகரம் ஆறனுருபு பன்மை. ஆடப் பாவம்
கெடும்.
திருஞானசம்பந்தர்
புராணம் |
|
மற்ற வண்பதி
அணைந்துவீ ரட்டத்து
மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு காலனை
யுதைத்ததுருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன்
போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் சடையுடை யான்எனும்
பதிகஇன் னிரைபாடி. |
|
பரவி ஏத்திஅங்
கரிதினிற் போந்துபார்
பரவூசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி யப்பெருங்
கலயர்தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத் தருளிய
விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா னமும்பணிந்
திருந்தனர் சிறப்பெய்தி. |
-சேக்கிழார். |
|