2890. |
கல்லினற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
|
|
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழி மிழலையார்
நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே. 2 |
பிறத்தலையும், அழித்தலையும்
வைத்தவர் உலகத்திற்குச் சிருட்டி கர்த்தரும்
சங்கார கர்த்தரும் ஆவர் எனவே-இரட்ச கர்த்தரும்-சிவபெருமான் ஒருவரே
யென்க. படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை,
காப்போற்காக்கும் கடவுள் காத்தவை, கரப்போன் எனவரும் சுருதி
வாக்கியங்களால் அறிக.(திருவாசகம்) கேள்வியர் முதல் வேதியர் ஈறாக
உள்ளவை திருவீழிமிழலை அந்தணர்களையும் வீழிமிலையார் என்பது முதல்
வருவன சிவபெருமானையும் குறிப்பனவாம். ஆழியர்-(ஆழங்காண முடியாத)
கடல் போன்றவராயிருந்தாலும் தம் அடியோற்றி என்பார்க்கு-தமது
திருவடியைப் போற்றியென்று சரண்புகும் அன்பர்களுக்கு. அணியர்-மிக
அணியராகிக் காட்சி கொடுப்பர். கேள்வியர் எனவே, சிந்தித்து, தெளிந்து,
நிட்டை உடையவர் என உபலக்கணத்தாற் கொள்ளலும் ஆம். முதலீரடிகளில்
திருவீழிமிலை அந்தணர்களைப்பற்றிக் கூறப்படுகிறது. தில்லை மூவாயிரம்
திருவீழிமிழலை ஆயிரம் என்பது பழமொழியாகலின் நாள்தோறும் ஓதுநல்
வேதத்தர் என எடுத்துக் கூறுகின்றார். இச் சிறப்பை பாரிசையும்
பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு வேரிமலி
பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே. எனத்
திருஞானசம்பந்தப் பெருமான் கூறுதலும் காண்க. அந்தணர் என்ற
சொல்லுக்கே திருவள்ளுவர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை (சீவகாருணியம்)
பூண்டு ஒழுகுபவர் என்று பொருள் காண்கின்றார். வேத
அந்தத்தையணவுவார் என நச்சினார்க்கினியர் கூறுவர். இங்கு இச்சொல்
காரண இடுகுறியாகாது காரணக்குறியாய் நின்றது.
2.
பொ-ரை: இறைவர் மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக்
கொண்டவர். பக்தியோடு துதிக்கும் மென்மையான இனத்தாராகிய
அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலையில் விளங்குபவர். சிவனை
நினையாது செய்த தக்கனது யாகத்தை அழித்தவர். அந்த யாகத்தில்
பங்கேற்ற சூரியனின் பற்களைத் தகர்த்
|