பக்கம் எண் :

496திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.       8

2940. தாமுக மாக்கிய வசுரர் தம்பதி
  வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமக னறிகிலாப் பூந்த ராய்நகர்க்
கோமக னெழில்பெறு மரிவை கூறரே.           9


உயிர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்த
நீலகண்டர். அந்தணர்கள் நிறைந்து விளங்குகின்ற திருப்பூந்தராய் என்னும்
திருத்தலத்தில், வீற்றிருந்தருளும் அவர் காயாம்பூவைப் போன்ற கருநிறக்
கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார். அவரைத் தரிசித்துப் பிறவிப்
பயனைப் பெறுங்கள்.

     கு-ரை: மாசு இன் + அ அரக்கனை வரையின்
வாட்டிய-பாவத்தையுடைய பாவியாகிய இராவணனைக் கயிலை மலையின்கீழ்
வாடச்செய்த, காய்ச்சின-துன்புறுத்தும் கோபத்தையுடைய. கறுத்த-கோபித்த.
கண்டனார்-கண்டத்தையுடையவர். அரசன் குற்றத்தைக் கண்டித்தான் என்றதில்
வரும் கண்டித்தல் என்பதுபோல, காசை-காயாம்பூ. செய்-உவமவாசகம்.
மாசின-பெயரடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். அடுத்த அடியிற்
காய்சினம் என வருதலால் முதலடியிலும் சினம் என்று பிரித்தல்
சிறப்புடைத்தன்று. வரையின்-இன் ஏழுனுருபில் வந்தது.

     9. பொ-ரை: தம் விருப்பம்போல் தேவர்கட்குத் துன்பம் செய்த
அசுரர்களின் மூன்று நகரங்களை வெந்தழியுமாறு செய்த விகிர்தர்
சிவபெருமான். திருமாலும், பிரமனும் அறிய ஒண்ணாதவர். திருப்பூந்தராய்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் அழகிய
உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர். அவரைத்
தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.

     கு-ரை: தாம்-தாங்கள். முகம் ஆக்கிய - முகம்போற் சிறப்புடையதாகக்
கொண்ட. வேம்முகம் ஆக்கிய-வேகும் இடமாகச்செய்த.
விகிர்தர்-வேறுபட்டதன்மையையுடையவர். பூமகன்-பிரமன். முகம்-முதலடியிற்
சிறப்புடையது என்னும் பொருளிலும். இரண்டாமடியில் இடம் என்னும்
பொருளிலும் வந்தது. பூமகன்-இங்கு எண்ணும்மை தொக்கது.
கோமகன்-தலைவன்.