பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)15. திருவெண்காடு511

  வேதியர் பரவுவெண் காடு மேவிய
ஆதியை யடிதொழ அல்லல் இல்லையே.        10

2964. நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
  செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.      11

திருச்சிற்றம்பலம்


இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர்.
எனவே அவர்களைச் சாராது, வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித்
துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத்
தொழத் துன்பம் இல்லையாம்.

     கு-ரை: நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்-சைவத்தின் உயர்வு
முதலிய நீதிகளை எடுத்துரைத்தலும் நல்லூழ் இன்மையால் அவற்றை
நினைத்துப் பார்த்தலும் செய்யாதார்.

     11. பொ-ரை: பசுபுண்ணியம், பதிபுண்ணியம் செய்த நல்லவர்கள்
வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன், செல்வனாகிய
எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய
அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய
துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது
நமது ஆணையாகும்.

     கு-ரை: பிறவித் துன்பங்கள் அவற்றிற்கு மூலகாரணமான
தொலைத்தற்கரிய வினைகளோடும் விட்டொழியும். நமது ஆணை-மேலும்
மேலும் வரக்கடவதுடன், வினையால் ஆனமையின் அல்லலோடு
அருவினையறுதல் ஆணை கூறியருளினார்.