பக்கம் எண் :

512திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

 16. திருக்கொள்ளிக்காடு

பதிக வரலாறு:

     ஆளுடைய பிள்ளையார் திருவாரூர், திருக்காறாயில், தேவூர்,
திருநெல்லிக்கா, கைச்சினம் ஆகிய தலங்களைத் தரிசித்து வருங்காலத்தில்
திருக்கொள்ளிக்காடு போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: காந்தார பஞ்சமம்

ப. தொ. எண்: 274   பதிக எண்: 16

திருச்சிற்றம்பலம்

2965. நிணம்படு சுடலையி னீறு பூசிநின்
  றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும்
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.      1

2966. ஆற்றநல் லடியிணை அலர்கொண் டேத்துவான்
  சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்


     1.பொ-ரை: பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப்
பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர், உலர்ந்த பிரமகபாலத்தைக்
கையில் ஏந்திப் பலியேற்று உண்பர். ஆயினும் அப்பெருமான் உயர்ந்த
குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: சுடலையில் எழும்பிய நீறு பூசிப் பேய்களோடு இணங்குவர்.
அங்குப் பெரிய கூத்து ஆடுவர். உலர்ந்த மண்டையோட்டில் உண்பர்.
ஆயின் அவரிடத்தில் என்ன குணம் உளதாவது என்னற்க; உயர்ந்த குணம்
எல்லாம் உடையர் என்க “கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி ... காயின் உலகனைத்தும்
கற்பொடி காண் சாழலோ.”

     2.பொ-ரை: நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர்கொண்டு
போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள்