| 
         
          |  | மாற்றல 
            னாகிமுன் னடர்த்து வந்தணை கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே       2
 |  
         
          | 2967. | அத்தகு 
            வானவர்க் காக மால்விடம் |   
          |  | வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
 கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.     3
 |  
         
          | 2968. | பாவண 
            மேவுசொன் மாலை யிற்பல |   
          |  | நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர் |  
  இறுதியை அறிந்து யாவராலும் 
        தவிர்க்க முடியாதவனாகி மார்க்கண்டேயனை நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவர்
 திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        நல்ல திருவடிகளை மலர்கொண்டு முற்றப் பூசிப்பவனாய். சாற்றிய-அபயம் என்று சொல்லிய. அந்தணன்-மார்க்கண்டேயர். ஆற்ற
 ஏத்துவானாய்ச் சாற்றிய அந்தணன் என்க. தகுதி-இறுதி. மாற்றலன்
 ஆகி-யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி. வந்து அணை-வந்து அடைந்த.
 கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடர். மாற்றுதல்-மாற்றேனெனவந்த
 கூற்றனை மாற்றி என்று திருவாசகத்திலும் வருதல் காண்க.
       3. 
        பொ-ரை: தாம் வாழ்வான் வேண்டி வணங்கும் வானவர்களைக் காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய
 சிவபெருமான், ஊமத்தம் பூவும், வன்னியும் அணிந்த சடைமுடியில்
 கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு
 என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        அத்தகு - அப்படிப்பட்ட. மால்விடம்-கொடிய விடத்தை, மால் என்ற சொல் இங்குக் கொடுமையென்னும் பொருளில் வந்தது.
 இப்பொழுது நீலமணி போற்காணப்படுவதாகிய கண்டத்தின் உட்பாகத்தில்
 வைத்தவர். மத்தம்-பொன்னூமத்தை. மலிந்த-மிகுதியாக அணியப்பட்ட
 கொத்துக் கொத்தாக அலரும் கொன்றையை அணிந்தவர்.
       4. 
        பொ-ரை: யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன்
 |